தற்கொலைக்கு 20 முறை தூண்டியது அந்த சம்பவம்! பொன்னம்பலத்திற்கு இப்படி ஒரு நிலை!
சினிமாவில் ஹீரோவாக நடிக்கும் நடிகர்களை போல் வில்லனாக நடிக்கும் சிலரை யாரும் கண்டுகொள்வதில்லை. ஒருகாலகட்டத்தில் முரட்டு வில்லனாக பல நடிகர்கள் திகழ்ந்து வந்தனர். ஆனால் தற்போது அவர்களை காமெடி நடிகர்களாக மாற்றி வருகிறது.
அப்படியாக தமிழ் சினிமாவில் கொடூர வில்லனாக திகழ்ந்தவர் தான் நடிகர் பொன்னம்பலம். அபூர்வசகோதரர்கள், மைக்கேல் மதனகாமராஜன், வால்டர் வெற்றிவேல், நாட்டாமை, அமர்க்களம், முத்து போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் இன்றளவும் வரவேற்பு தான்.
நூறுக்கும் மேற்ப்பட்ட படங்களில் நடித்து வந்த பொன்னம்பலம் சமீபத்தில் பிக்பாஸ் 2 சீசனில் கலந்து கொண்டார். இதையடுத்து சமீபத்தில் உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சைக்காக பணக்கஷ்டத்தில் அவதியுற்றார். தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி மற்றும் சரத்குமார் உள்ளிட்ட பிரபலங்கள் உதவியுள்ளனர்.
சமீபத்தில் உடல்நிலை சரியான நிலையில் வீடியோ ஒன்றினை வெளியிட்டார். அதில், உடல்நிலை சரியில்லை, மருத்துவத்திற்கு பணமும் இல்லை அப்படிப்பட்ட சூழ்நிலையில் கிட்டத்தட்ட 20 முறை தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற எண்ணம் வந்ததாக கூறியது அதிர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் முன்னணி நடிகர்கள் பலரின் படங்களில் நடித்தும் எனக்கென சொத்து எதுவும் சேர்க்காமல் இருந்து வந்ததது மிகப்பெரிய தவறு என்பதை உணர்ந்து கொண்டதாக கூறியுள்ளார். இவ்வளவு வேதனையிலிருந்தும் ரசிகர்களின் வேண்டுதலால் தான் அவரை உயிர் பிழைக்க வைத்தது, அதற்கு நன்றியும் கூறினார்.