நடிகையை மட்டுமின்றி அவரின் மகளையும் விடாத சீனியர் நடிகர்!! இவ்வளவு மோசமானவராம்..
சீனியர் நடிகர்
நல்ல பின்னணி குடும்பத்தில் இருந்து சினிமாவுக்கு வந்த நடிகர், அழகு, திறமை என அத்தனையும் கொண்டிருந்தவருக்கு முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட் தான். இதன் காரணமாக சில காலத்திலேயே கோலிவுட்டில் முன்னணி இடத்தை பிடித்தார். பெண் ரசிகைகளின் உள்ளத்தை ஈர்த்தவர் தினமும் பார்ட்டி என்று ஜாலியாக இருந்தார்.

பார்ட்டிக்கு செல்வது, பெண்களுடன் ஜாலியாக இருப்பது என இருந்தவர் ஒருக்கட்டத்தில் அதை மட்டுமே செய்ய ஆரம்பித்தார். ஷூட்டிங்கிற்கு ஒருங்காக வருவதை நிறுத்தி, ஏகப்பட்ட பஞ்சாயத்துக்கள் அவரை சுற்றி எழுந்தன.
எத்தனை பஞ்சாயத்து வந்தாலும் தனது போக்கை மாற்றாமல் இருந்த நடிகரை திரைத்துறையினர் ஒதுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். திரைத்துறையினர் ஒதுக்கினாலும் நடிகர் தன்னுடைய ஜாலியான மனப்போக்கை விடவில்லை.
தான் பீக்கில் இருந்தபோதே தேவையானவற்றை சம்பாதித்துவிட்டதால் வாய்ப்புகள் இல்லை என்று கவலைப்படவில்லை. மாறாக தான் சம்பாதித்த பணத்தை மது, மாது என்று செலவழித்தார். ஏகப்பட்ட பெண்களுடன் பழக்கம் வைத்திருந்தவர், தன்னுடன் நடித்த நடிகைகளையும் விட்டுவைக்கவில்லை.
இவ்வளவு மோசமானவரா
அவர்களுக்கு தேவையானவற்றை செய்து தன் அருகிலேயே வைத்துக்கொண்டார். அவர்கள் எல்லாம் ஒரு புள்ளிக்கு மேல் போர் அடிக்க ஆரம்பிக்க, அப்படியே ஒருநாள் தன் சமகால நடிகை போர் அடித்ததை அடுத்து அவருடைய மகளை பார்த்துள்ளாராம் நடிகர்.

அந்த நடிகையிடம் மகள் பற்றி விசாரிக்க முதலில் தாய் என்ற ஸ்தானத்தில் இருந்து மறுத்துவிட்டாராம் அம்மணி. ஆனால் நடிகரின் தொடர் வற்புறுத்தல், கொட்டிக்கொடுத்த பணமெல்லாம் அவருடைய மனதை மாற்ற, தனது மகளிடம் பக்குவமாக பேசி நடிகருடன் பழகவிட்டாராம் நடிகை.
அந்த பெண்ணும் தாய் சொன்னதால் மட்டுமின்றி தனக்கும் பணத்தேவை அதிகம் இருப்பதால் நடிகர் சொல்வதையெல்லாம் கேட்க ஆரம்பித்து சரண்டரே ஆகிவிட்டாராம். நடிகரும் தேவையானது கிடைத்தப்பின் அடுத்த பெண்ணை நோக்கி சென்றுவிட்டாராம்.