22 ஆண்டு சினிமா வாழ்க்கை.. அதை ஏன்டா பண்ணோம்னு 2 நாளே தோணுச்சி!! விரக்தியில் பேசிய நடிகர் ஸ்ரீகாந்த்..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் ஸ்ரீகாந்த், ரோஜா கூட்டம் படத்தின் மூலம் கதாநாயகனாக நடித்து முதல் படத்திலேயே வெற்றியை கண்டார். அதன்பின் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த ஸ்ரீகாந்த் தெலுங்கு, மலையாளம், தமிழ் படங்களில் நடித்து வந்தார்.
சமீபகாலமாக அவர் ஹீரோவாக நடித்த படங்கள் சரியான வரவேற்பை பெறாமல் தவித்தார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், இந்த படத்தில் ஏன் நடித்தோம் என்று தோன்றிய படம் என்ன என்று கூறியிருக்கிறார்.
சவுக்கார்பேட் தான். அந்த படத்தில் ஏன் டா பண்ணோம்னு 2வது நாளே தோணுச்சி. ஆனா, ஒரு நடிகரின் நிர்பந்தம் பின் வாங்க முடியாது. நானும் ஆணவத்தில் வெளியில் போக ஆசைப்பட்டேன் முடியவில்லை.
தயாரிப்பாளர் வியாபாரம் ஆகிவிட்டது என்று கூறினார். பின் என் வீட்டிலேயே என்னை கிண்டல் பண்ணாங்க. வீட்டில் இருப்பவர்களே கிண்டல் பண்ணும் போது எப்படி இருக்கும், ஜடை போட்டு லிப்ஸ்டிக் போட்டு அனுப்பினால் எப்படி இருக்கும் அப்படி இருந்தது என்று விரக்தியில் புலம்பியிருக்கிறார் நடிகர் ஸ்ரீகாந்த்.