விஜயகாந்த் மறைவுக்கு வர முடியாதா? கையெடுத்து கும்பிட்ட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்..
தேமுதிக தலைவரும் நடிகருமான கேப்டன் விஜயகாந்த் கடந்த ஆண்டு டிசம்பர் 28 ஆம் தேதி மரணமடைந்த செய்தி தமிழக மக்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்தது. பல பிரபலங்கள் அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியும் இரங்கல் தெரிவித்தும் வந்தனர்.
பல பிரபலங்கள் அதுபற்றி எந்த கருத்தினையும் வெளியிடாமல் வந்தது விமர்சனத்திற்குள்ளனது. அந்தவகையில் கடை திறப்பு விழாவிற்கு வந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷிடம் விஜயகாந்த் மரணம் பற்றி கேட்கப்பட்டது.
அதற்கு அவர், நான் பாண்டிச்சேரியில் சுழல் 2 பட ஷூட்டிங்கில் இருந்ததாகவும் விஜய்காந்த் மறைவிற்கு என்னால் வரமுடியவில்லை என்று கூறியிருக்கிறார்.
மேலும் விஜயகாந்த் மறைவு பற்றியும் நடிகர் சங்க கட்டிடத்திற்கு அவரது பெயரை வைப்பது குறித்த கேள்வியையும் பத்திரிக்கையாளர்கள் கேள்விக்கு தான் இப்போது கடை திறப்பு விழாவிற்கு வந்திருக்கிறேன், அதை பற்றி மட்டும் கேளுங்கள் என்று கைக்கூப்பி கூறியிருக்கிறார்.
இப்படி பேசிய ஐஸ்வர்யா ராஜேஷிடம் நெட்டிசன்கள், பக்கத்தில் இருக்கும்பாண்டிச்சேரியில் இருந்து சென்னைக்கு வர முடியவில்லை என பேசுவது எல்லாம் சுத்த மோசமானது என்று வெளுத்து வாங்கி வருகிறார்கள்.