கேரவன் உள்ளே தனுஷ் இப்படி தான் நடந்துகொள்வார்! உண்மையை கூறிய நடிகை அமலா பால்
தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் அமலா பால். இவர் தமிழில் வெளிவந்த மைனா படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். பின் விஜய்யுடன் இணைந்து தலைவா, தனுஷுடன் இணைந்து வேலையில்லா பட்டதாரி ஆகிய படங்களில் நடித்து முன்னணி நடிகையானார்.
தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த ஆடு ஜீவிதம் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. நடிகை அமலா பால் கடந்த 2023ம் ஆண்டு ஜகத் தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார்.
தனுஷ் குறித்து பேசிய அமலா பால்
நடிகை அமலா பால் மற்றும் தனுஷ் இருவரும் முதல் முறையாக இணைந்து பணிபுரிந்த திரைப்படம் வேலையில்லா பட்டதாரி. பின் இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் இணைந்து நடித்திருந்தனர்.
இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் தனுஷ் குறித்து அமலா பால் பேசியது, இணையத்தில் படுவைரலாகி வருகிறது.
"வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருதேன். அப்போதில் நடிக்கபோது, அனைவரும் கேரவனில் சேர்ந்து ஒன்றாக தான் சாப்பிடுவோம். தனுஷ் பார்க்கத்தான் ஒல்லியாக இருக்கிறார். ஆனால், அவர் நிறையவே சாப்பிடுவார். அவர் முழுக்க முழுக்க சைவ உணவு சாப்பிடுவார். அதே சமயம் முட்டை மட்டும் அசைவத்தில் விரும்பி சாப்பிடுவார்.
அதேபோல் சாப்பிடும்போது அவருக்கு ஒரு உள்ளது. அவர் கவுண்டமணியின் மிகப்பெரிய ரசிகர். எனவே சாப்பிடும்போது கேரவனில் இருக்கும் டிவியில் கவுண்டமணி சாரின் நகைச்சுவை காட்சிகளை போட்டுவிடுவார். அதை பார்த்துக்கொண்டேதான் சாப்பிடுவார்" என அமலா பால் கூறியுள்ளார்.