31 வது பர்த்டே!! பிறந்தநாளுக்கு நடிகை தர்ஷா குப்தா செய்த செயல்..
தர்ஷா குப்தா
சின்னத்திரையின் மூலம் பல நட்சத்திரங்கள் பிரபலமாகியுள்ளனர். அப்படி சின்னத்திரையில் முதன் முதலில் அறிமுகமாகி இன்று பிரபலமான நடிகையாக இருப்பவர் தர்ஷா குப்தா.
முள்ளும் மலரும், மின்னலே, செந்தூர பூவே போன்ற சீரியல்களில் நடித்து வந்த நடிகை தர்ஷா குப்தாவிற்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சி நல்ல பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது.
31வது பிறந்தநாள்
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி தர்ஷா வெளியிடும் போட்டோஸ் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக வைரலாகும். ஜூன் 7 ஆம் தேதி தன்னுடைய 31வது பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார்.
திருப்பதி கோயில் உட்பல ஒருசில கோயிலுக்கு சென்று வழிப்பட்டும் இருந்தார். மேலும் ரோட்டோரத்தில் படுத்திருக்கும் நபர்களுக்கு உணவு வழங்கியிருக்கிறார் தர்ஷா. என் பிறந்தநாள் இவர்களுடன் முடிந்தது என்று கூறி ஒருசில புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்.
இதற்கு பலரும் தர்ஷா குப்தாவின் செயலை பாராட்டியபடி கருத்துக்களை தெரிவித்தும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறியும் வருகிறார்கள்.