இதனால் தான் விஜய் சேதிபதி கூடவே நடிக்கிறீங்களா!! ஓப்பனாக மேடையில் பேசிய நடிகை காயத்ரி..
தமிழ் சினிமாவில் 18 வயசு என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை காயத்ரி சங்கர். இப்படத்தினை தொடர்ந்து நடுவுல கொஞ்சம் பக்கத்த கானோம், மத்தாப்பு, ரம்மி, புரியாத புதிர், சீதகாதி, சித்திரம் பேசுதடி, சூப்பர் டீலக்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார். பொன்மாலைப் பொழுது, ரம்மி, ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், புரியாத புதிர், சூப்பர் டீலக்ஸ், சீதக்காதி போன்ற படங்களில் நடிகர் விஜய் சேதுபதியின், சூப்பர் கெமிஸ்ட்ரி நடிகையாகவும் திகழ்ந்து வந்தார்.
சமீபத்தில் விக்ரம் படத்திற்கு பின் பகீரா படத்தில் நடித்திருந்தார். பின் வாய்ப்பில்லாமல் மலையாளம், தெலுங்கு பக்கம் சென்றுள்ளார். தற்போது கவர்ச்சி ரூட்டுக்கு மாறி வாய்ப்பிளக்க வைக்கும் படியான போட்டோஷூட் எடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்து வருகிறார். சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்.
அப்போது அவரிடம், மற்ற ஹீரோக்களுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது அதிகமுறை விஜய் சேதுபதியுடன் நடிக்கிறீர்கள். அப்படியென்றால் விஜய் சேதுபதியுடன் தான் நடிக்க வாய்ப்பு கிடைக்கிறதா? அல்லது ஜோடியாக நடித்தால் ஹிட்டாகுகிறது என்று தோன்றுகிறதா? என்று கேள்வி எழுப்பட்டது.
அதற்கு காயத்ரி, இரண்டுமே கிடையாது என்று நினைக்கிறேன், அது இயக்குனர், தயாரிப்பாளரின் முடிவால் தான் என்று கூறியிருக்கிறார். மேலும், நீங்கள் நடிச்சாலே படம் ஹிட் ஆகிடுமா? எப்படி என்ற கேள்விக்கு, நான் நடித்த படங்கள் எல்லாமே ஹிட் கிடையாது. நான் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன், அதற்கு காரணம் சிறந்த இயக்குனர்கள் படங்களில் நடித்துள்ளேன். அதிலும் விஜய் சேதுபதி என்னுடைய சிறந்த கோ-ஸ்டார் என தெரிவித்துள்ளார்.