ஆடையில்லாம போட்டோ போட்டதே இதுக்கு தான்!! நடிகை கொற்றவை சொன்ன காரணம்..
கொற்றவை
எழுத்தாளரும் நடிகையுமான கொற்றவை சமீபத்தில் ஆடையின்றி எடுத்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்தது பலரது கண்டனத்தையும் பெற்றது. இதுகுறித்து சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், நான் பகிர்ந்த புகைப்படங்களில் மொத்தம் இரண்டு வகை புகைப்படங்கள் உள்ளது.
ஆடையில்லாம போட்டோ
ஒன்று, நிர்வாணமாக அமர்ந்து கொண்டு மேலே பார்க்கும் புகைப்படம், மற்றொன்று பின்புறம் எடுக்கப்பட்ட புகைப்படம். முதல் இரு புகைப்படங்களுமே அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட போது எடுத்தேன். நான் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்தீர்கள் என்றால், பரிதவிப்பும், இயலாமையுடன் பெண்களின் உடலை எப்போதுடா விடுவிப்பீர்கள் என்பதைத்தான் நான் சொல்ல முயற்சி செய்தேன். மற்றொரு புகைப்படத்தில் மேலே இருந்து கடவுள் வருவார் என்று பார்த்துக்கொண்டிருப்பதுபோல்.
இவை இரண்டும் குறியீடுக்ளைத்தான் நான் அந்த புகைப்படங்கள் மூலம் சொல்லியிருக்கிறே. இந்த குறியீடு புரிய வேண்டுமென்றால் கொஞ்சமாவது அறிவு வேண்டும் அது இந்த சமூகத்தில் குறைவு. என் உடலை நான் ஆயுதமாக வைக்கிறேன். இதைத்தான் நான் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் இருந்து சொல்கிறேன். இந்த புகைப்படத்தை நான் பகிர காரணமே, சமீபத்தில் நடந்த விவாதத்தில் பெண்கள் உடை சார்ந்தும் உடல் சார்ந்தும் இருந்தது.
நான் பெண்களை நோக்கி கேட்கிறேன், உங்கள் நிர்வாணம் உங்களுக்கு ஆபாசமாக நினைக்காதீங்க என்றும் யாராவது உங்களை புகைப்படம் எடுத்து மிரட்டினால் அதை கடந்துவிடுங்கள்.
அதேபோல் ஆண்களுக்கு நான் சொல்வது, நீங்கள் பெண் உடலை பார்ப்பதில் இருந்து கடந்துவிடுங்கள், பெண்களைப்பாருங்கள், ரசியுங்கள், உங்கள் விருப்பத்தை அவர்களிடம் தெரிவியுங்கள். பெண்களுக்கு விருப்பம் இருந்தால் ஏற்றுக்கொள்ளப் போகிறார்கள். ஆனால் இப்படி உடை அணிந்தால் இப்படித்தான் செய்வேன் என்று கூறும் உரிமை உங்களுக்கு கிடையாது என்று தெரிவித்துள்ளார்.