பிரபல நடிகருடன் அதை செய்ய ஆர்வமாக உள்ளேன்.. நடிகை மிருணாள் தாகூர் ஓபன் டாக்
தெலுங்கில் வெளிவந்த சீதா ராமம் படத்தின் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களின் மனதிலும் இடம்பிடித்தவர் நடிகை மிருணாள் தாகூர். இதை தொடர்ந்து தெலுங்கில் வெளிவந்த Hi நானா திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது.
தென்னிந்திய சினிமாவை விட பாலிவுட் திரையுலகில்தான் நடிகை மிருணாள் தாகூருக்கு அதிக பட வாய்ப்புகள் வருகிறது. படங்கள் மட்டுமின்றி வெப் தொடர்களிலும் கவனம் செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்ததாக Son of Sardaar 2, Dacoit: A Love Story ஆகிய திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். விரைவில் தமிழ் சினிமா பக்கம் வருவார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், கமல் ஹாசன் குறித்து நடிகை மிருணாள் தாகூர் பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதில் "எனது சிறு வயதில் இருந்தே கமல் ஹாசன் சாரை நான் மிகவும் ரசித்திருக்கிறேன். அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று நான் மிகவும் விரும்புகிறேன். குறிப்பாக கமலுடன் நடனமாட நான் மிகவும் ஆர்வமாக உள்ளேன்" என கூறியுள்ளார்.