ஒன்றரை வருஷமாக ஒரு பையனுடன் பேசாமல் 10 முறை அதை செய்தேன்!! நடிகை பிரியா பவானி சங்கர்..
செய்தி வாசிப்பாளராக இருந்து சின்னத்திரை நடிகையாக மாறியவர் நடிகை பிரியா பவானி சங்கர். கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் கதாநாயகியாக நடித்த முதல் சீரியலிலேயே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். அதன்பின் மேயாதமான் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி கடைக்குட்டி சிங்கம் படத்தில் முக்கிய ரோலில் நடித்தும் பிரபலமானார்.
அதன்பின் அடுத்தடுத்த தமிழ் படங்களில் நடித்து வந்த பிரியா பவானி சங்கர், இந்தியன் 2, டிமான்டி காலனி 2 உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் அளித்த சமீபத்திய பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரியா பவானி சங்கர் ராஜ் வேலை காதலிக்கும் முன்பு வேறொருவரை காதலித்ததாகவும் ராஜ் வேலும் வேறொருவரை காதலித்ததாகவும் அவரே கூறியிருக்கிறார்.
இதுகுறித்து நடிகை பிரியா பவானி சங்கர் ஒரு பேட்டியொன்றில், நான் மோசமான ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாகவும் நல்லவன் என்று நினைத்தவன் மிகவும் மோசமானவனாக இருந்ததாகவும் தெரிவித்தார்.
மேலும், ஒரு கட்டத்தில் என்ன செய்வது என்று முடிவெடுக்க முடியாத அளவிற்கு அவதிப்பட்டு வந்ததால் அவனுடன் இருக்க முடியாமல் பிரேக் அப் செய்துவிட்டேன் என்று தெரிவித்திருக்கிறார்.
மேலும் ஜிம்மில் ஒரு பையன் மீது கிரஷ் இருந்ததாகவும் ஒன்றரை வருடம் அவனை 10 முறை பார்த்திருக்கிறேன், ஆனால் பேசியது கிடையாது என்று கூறியிருக்கிறார்.
இப்படியொருவரை கல்யாணம் பண்ணனும் என்று சின்ன வயது ஆசை இருந்தது. ஊர் பக்கம் இருக்கும் மில் ஓனர், நல்ல ஒரு எஸ்யூவி கம்பீரமா ஓட்டிக்கிட்டு, விட்ல மீன் கொழம்பு வெச்சிகிட்டு, மாமியார் கூட சீரியல் பார்த்துக்கிட்டு சண்டை போட்டுக்கிட்டு இருக்கணும் என்று பிரியா பவானி சங்கர் தெரிவித்திருக்கிறார்.