ஜாக்கெட்டுக்குள் தங்கக்கட்டி!! கடத்தில் போலிசில் சிக்கிய நடிகை ரன்யா ராவ்..
சினிமா பிரபலங்கள் சமீபகாலமாக தவறான செயல்களில் ஈடுபட்டு கைது செய்யப்படுவது அதிகரித்துள்ளது. அப்படி ஒரு நடிகை தங்கக்கட்டிகளை கடத்தி போலிசில் சிக்கியிருக்கிறார்.
ரன்யா ராவ்
துபாயில் இருந்து பெங்களூரு விமான நிலையத்திற்கு வந்த நடிகை ரன்யா ராவ், போலிஸ் கான்ஸ்டபிள் பசவராஜூவின் உதவியுடன் பாதுகாப்பு சோதனைகளை தவிர்க்க முயன்றுள்ளார். அதனை சந்தேகித்த டி ஆர் ஐ அதிகாரிகள் ரன்யாவிடம் சோதனை நடத்தினர்.
அப்பொது அவரது ஜாக்கெட்டிற்குள் தங்கத்தை மறைத்து எடுத்து வந்திருப்பதை கண்டுபிடித்தனர். 14.2 கிலோ எடைக்கொண்ட தங்கத்தின் மதிப்பு ரூ. 12.56 கோடியாம். தங்க கடத்ததில் ஈடுபட்டதால் அவரை கைது செய்த டி ஆர் ரை அதிகாரிகள் நீதிமன்ற காவில்14 நாட்களுக்கு விசாரனைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
அதன்பின் ரன்யா ராவின் பெங்களுரு லாவலி ரோட்டில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் சோதனை நடத்தியதில் அங்கு ரூ.2.67 கோடி ரொக்கமும், ரகசிய லாக்கரில் 2.06 கோடி தங்க நகைகளையும் சேர்த்து ரூ.17 கோடி மதிப்பிலான சொத்துக்களையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.