செருப்பால் அடிச்சிருப்பேன் ஓடிட்டாரு!! நடுரோட்டில் நடந்ததை ஓப்பனாக கூறிய நடிகை ரேகா..
சினிமா பிரபலங்கள் குறித்த தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் அந்தரங்க செயல்களை பற்றி வெளிப்படையாக இணையதளங்களுக்கு பேட்டியளித்து சர்ச்சையில் சிக்கி வருபவர் பயில்வான் ரங்கநாதன். இவரின் இந்த செயலுக்கு நடிகை ராதிகா, ரேகா நாயர் உள்ளிட்ட பலர் கண்டித்து வந்தனர். சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகை ஷகீலா, பயில்வான் ரங்கநாதன் மகள் ஓரினச்சேர்க்கையாளர் என்று எனக்கு தெரியும் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதுகுறித்து பயில்வான் வேறொரு பேட்டியில், ஷகீலா நாக்கு அழுகிடும், பொய் சொல்றாங்க, என் மீது இருக்கும் வன்மத்தில் பேசுகிறார் என்று குற்றம் சாட்டினார் பயில்வான். இதனை தொடர்ந்து தொகுப்பாளர், அடுத்தவங்க பெட்ரூமில் எட்டிப் பார்த்த மாதிரி பேசுகிறீங்களே என்றும் யார் துறந்து காட்டினாலும் பார்ப்பீங்களா? அது தப்பா தெரியவில்லையா? என்று கேட்டிருக்கிறார். அவங்க திறந்து வைத்தால் நான் பார்க்கத்தான் செய்வேன், திறந்து வைத்திருக்கும் பெட்ரூமை எட்டிப்பார்த்தால் என்ன தப்பு. அவங்க காட்டினதை தான் நான் பேசுறேன்.
அவங்க பணம் வாங்கி நடிக்கிறாங்க, நான் பேசி பணம் வாங்குகிறேன் என்றும் பொழப்பு, பேச்சு வியாபாரம் என்றும் கூறியிருக்கிறார் பயில்வான். மேலும். ராதிகா, ரேகா நாயர், ஷகீலா, குயிலை பார்த்து பயப்படுகிறீர்கள். ராதிகா சரத்குமார் உங்களை அடிக்க செருப்பை எடுத்து வரவில்லையா, ரேகா நாயர் செருப்பால் அடிக்கவில்லையா என்று கேள்வி கேட்டிருக்கிறார் தொகுப்பாளர்.
அதற்கு பயில்வான், நான் அவர்களை பார்த்து பயப்படவில்லை, ராதிகா செருப்பு எடுத்து வரல, கொம்பு தான் எடுத்துட்டு வந்தாங்க. ரேகா நாயர் அடிச்சாங்களான்னு அவங்ககிட்ட கேளுங்க, அவங்க என்ன தொடவே இல்லை, வீடியோ என்கிட்ட இருக்கு என்று கூறியிருக்கிறார். அதற்கு தொகுப்பாளர், ரேகா நாயருக்கு கால் செய்து விளக்கம் கேட்டிருக்கிறார்.
அந்த காலில் பேசிய ரேகா நாயர், நான் செருப்பால் அடிக்கவில்லை, அவர் முதுகில் தான் அடித்தேன். ராதிகா அடித்தார்களா என்று எனக்கு தெரியாது, நான் நேரடியா பார்க்கவில்லை. ஏன் இப்படி பேசுறீங்க என்று கேட்டதற்கு வருமானம் வருதுன்னு சொன்னார். நீ பார்த்தியா நான் அம்மணமா நடித்ததை என்று கேட்டு சட்டையை பிடித்து கேட்டேன் என்றும் ஷூவை கழட்டும் போது அங்கிருந்து அவர் போய்விட்டார் என்று ரேகா நாயர் கூறியிருக்கிறார்.