நான் செய்த அந்த தப்பு உண்மை தான்.. இனிமே பண்ணமாட்டேன்!! நடிகை சமந்தா உறுதி..
தமிழ் சினிமாவில் பாணா காத்தாடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருபவர் நடிகை சமந்தா. தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து வரும் சமந்தா, கடந்த 2017ல் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணமாகி 4 ஆண்டுகள் கழித்து இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்துவிட்டனர். இதற்கு காரணம் பலவிதமாக பேசப்பட்டு வந்த நிலையில், சமந்தா பல படங்களில் கவர்ச்சி காட்டி நடிக்க ஆரம்பித்தார். இடையில் மயோசிடிஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
தீவிர சிகிச்சை மேற்கொண்ட போதிலும் படங்களில் பிஸியாகவும் நடித்து வந்தார். தற்போது அதிலிருந்து மீண்டு வரும் சமந்தா, பாலிவுட்டில் பிஸியாக நடித்து வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருந்து கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
சமீபத்தில் வெளியிட்ட வீடியோவில் கடந்த காலத்தில் செய்த அந்த தவறு உண்மை தான். வேண்டும் என்றே செய்யவில்லை, தெரியாமல் செய்த தவறு தான் அது. உண்மை தெரிந்தப்பின் அதுபோன்ற விஷயங்களை விளம்பரப்படுத்துவதை நிறுத்திவிட்டேன்.
இப்போது விழிப்பாக இருக்கிறேன் என்று ஆரோக்கியமற்ற பிராண்ட் ஒன்றிற்கு விளம்பர தூதராக இருந்தது பற்றிய கேள்விக்கு இப்படியான பதிலை கொடுத்திருக்கிறார் நடிகை சமந்தா.