லைட்டை ஆஃப் பண்ணிடுங்க.. இயக்குநர் வெற்றிமாறனிடம் அப்படி சொன்ன அந்த நடிகை
வெற்றிமாறன்
தமிழ் சினிமாவில் தோல்வியே காணாத இயக்குநர்களில் ஒருவர் வெற்றிமாறன்.
கடைசியாக இவர் இயக்கத்தில் வெளிவந்த விடுதலை 2 கலவையான விமர்சனங்களை சந்தித்து இருந்தாலும், வசூலில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. இவருடைய இயக்கத்தில் அடுத்ததாக வாடிவாசல் திரைப்படம் உருவாகவுள்ளது.
அந்த நடிகை
இந்நிலையில், வெற்றிமாறன் குறித்து பயில்வான் பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், " வடசென்னை படத்தில் காண்பிக்கப்பட்டது போன்று தான் அந்தப் பகுதி மக்கள் பேசுவார்கள். படம் வாழ்வியலோடு இருக்க வேண்டும் என்பதற்காக அந்த மாதிரியான கெட்ட வார்த்தைகள் கொண்ட டயலாக்குகளை வெற்றிமாறன் வைத்திருந்தார்.
படத்தில் சீரியல் நடிகை தேவி ப்ரியாவைத் தான் டப்பிங் பேச வைத்திருந்தார்கள். அவர் இது மாதிரியான வசனங்களை பார்த்து அதிர்ச்சி அடைந்து, 'என்ன இந்த வசனங்கள் எல்லாம் இவ்வளவு அசிங்கமாகவும், மோசமாகவும் இருக்கிறது. எப்படி பேசுவது' என கேட்டார்.
அதற்கு வெற்றிமாறன், ' படத்தில் உங்கள் முகம் வராது; குரல் மட்டும்தான். பின் பேசுவதற்கு என்ன? அதற்கான பணத்தையும் கொடுக்கிறோம்.
என்று சொல்ல, உடனே தேவி ப்ரியாவோ, டப்பிங் ஸ்டூடியோவில் இருக்கும் விளக்குகளை எல்லாம் அணைத்துவிடுங்கள் என சொல்லி பிறகுதான் டப்பிங் பேசினார்" என்று தெரிவித்துள்ளார்.