அட்ஜெஸ்மெண்ட் செய்த அந்த 5 நிமிஷத்துல என்ன கிடைக்க போது.. நடிகை யாழினி ஓப்பன் டாக்
சினிமாத்துறையில் வாய்ப்புக்காக அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய சொல்லி கேட்பது குறித்து பல நடிகைகள் ஓப்பனாக பேசியிருக்கிறார்கள். அந்தவகையில், சீரியல் மற்றும் ஒருசில படங்களில் நடித்த நடிகை யாழினி சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றி சில விசயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். சினிமாவுக்கு எல்லாம் போகக்கூடாதுன்னு சொல்லுவாங்க.
தப்பான ஃபீல்ட்னு சொன்னா, எல்லா இடத்திலும் இருக்கிறது. ஷூட்டிங்கில் அட்ஜெஸ்ட்மெண்ட் இருக்குன்னு சொல்றாங்க, ஒரு இடத்திற்கு போகும் போது அங்கு நல்லதை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள். என்னையும் அட்ஜெஸ்ட் பண்ண கேட்டிருக்கிறார்கள். கேட்ட இடத்தில் வேண்டாம் என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன்.
அதை பண்ணால் தான் வாய்ப்பு கிடைக்கனுமா, அந்த 5 நிமிஷத்துல என்ன கிடைக்க போகிறது, ஒன்னும் கிடைக்க போறது கிடையாது. ஆனால் அதையே செய்ய சொல்கிறார்கள். நாங்கள் கஷ்டத்திற்ககவும் ஆசைக்காகவும் இந்த துறையில் நடிக்க வருகிறோம்.
அதற்கு ஏன் இதை பண்ண சொல்றாங்க. கேமராமேன், இயக்குனர், தயாரிப்பாளர் கேட்கிறாங்க அதுமாறி சொல்ற இடத்தில் இருக்கும். என்னோட சீன் ஒரு படத்தில் கட் பண்ணிட்டாங்க.
என்னை படத்தின் ஆரம்பத்தில் எதுவும் கேட்கவில்லை. ஷூட்டிங் எல்லாம் முடிந்துவிட்டது. அதன்பின் என் சீன் கட் பண்ணிட்டாங்க. நான் அட்ஜெஸ்ட் பண்ணமாட்டேன் என்று கூறியதால், தான் கட் பண்ணிட்டோம் சொல்றாங்க என்று யாழினி கூறியிருக்கிறார்.