தகுதியே இல்லாமல் வாய்ப்பில்லாமல் விரட்டப்பட்ட நடிகை.. இந்த பிக்பாஸ் நடிகையுமா..
சினிமாவை பொறுத்தவரை நல்ல திறமை உள்ள நடிகைகளுக்கு வாய்ப்புகள் அமைகிறது. அப்படி கிளாமர் காட்டி ஆட்டம் போட்டாலும் அதிலும் சில முகபாவனைகள் இருந்தால் தான் ரசிக்கும் படியாக இருக்கும்.
அப்படி சினிமாவில் அறிமுகமாகி சாதிக்க முடியாமல் போனவர்களில் வரிசையில் இருப்பவர் பிக்பாஸ் நடிகை ஷிவானி. சீரியல் நடிகையாக இருந்து பின் பிக்பாஸ் வாய்ப்பு பெற்றும் வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்தார். வெறும் கவர்ச்சி காட்டி இணையத்தில் புகைப்படங்களை வெளியிட்டதால் சிறு கதாபாத்திரத்தில் விக்ரம் படத்தில் நடித்தார்.

2 நிமிட காட்சி மட்டுமே அவருக்கு இருந்தது. இதன்பின் வடிவேலு படத்தில் நடிக்க கமிட்டாகினார். அதன்பின்னும் சினிமா வாய்ப்பு வரவில்லை.
இவருக்கு அடுத்து இருப்பவர் நடிகை மனிஷா யாதவ். வழக்கு எண் 18/9 படத்தில் அறிமுகமாகி ஒரு குப்பை கதை போன்ற படங்களில் நடித்து அவரது நடிப்பு எடுபடாததால் தூக்கி வீசப்பட்டார்.
சார்பட்டா பரம்பரை படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாகவும் நட்சத்திரம் நகர்கிறது படத்தில் முக்கிய ரோலில் நடித்து பா ரஞ்சித் இயக்கத்தில் நடித்தவர் துஷாரா விஜயன். இவ்விரு படங்களில் பா ரஞ்சித் மட்டுமே வாய்ப்பு கொடுத்துள்ளார். ஆனால் வரவேற்பு பெற்று ரசிகர்களை கவரவில்லை.
பேட்ட, மாஸ்டர், மாறன் போன்ற முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்தும் போட்டோஷூட் எடுத்து ரசிகர்களை கவர்ந்தும் வந்த மாளவிகா மோகனன், நல்ல நடிப்பை வெளிக்காட்டவில்லை என்பதால் வாய்ப்பில்லாமல் திணறி வருகிறார்.

மாடலிங் துறையில் இருந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தில் நடித்து ஓரளவிற்கு தான் அனைவராலும் கவரப்பட்டார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் செய்த அட்டூழியம் முகம் சுளிக்க வைத்தும் அதன்பின் வாய்ப்புகள் இன்றியும் விலக்கி வைக்கப்பட்டு வருகிறார்.