தெருதெருவாக சோப்பு விற்கும் நிலை? பரிதாபத்தின் உச்சியில் இருந்த நடிகை ஐஸ்வர்யா..
தமிழ் சினிமாவில் 80, 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகையாக திகழ்ந்தவர் நடிகை லட்சுமி. இவரது மகளாக சிறு வயதிலேயே ஐஸ்வர்யாவை லட்சுமி அவர்கள் நடிகையாக அறிமுகப்படுத்தினார்.
முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து கொடிக்கட்டி பறந்த நடிகை ஐஸ்வர்யா ஒரு மகளுடன் சின்னத்திரையில் பணியாற்றி வருகிறார். தமிழ், தெலுங்கு என நடித்து வந்த ஐஸ்வர்யா சமீபத்தில் தனியார் இணையத்தளத்திற்கு பேட்டி கொடுத்துள்ளார்.

பயில்வானை மதிக்காதீங்க:-
சினிமா நட்சத்திரங்களை படுகேவளமாக விமர்சித்து வரும் பயில்வான் பற்றிய கேள்விக்கு, இது போன்று இருப்பவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் என்னை கூட கூட்டத்தில் இருந்தவர் ஐஸ் - வரியா என்று கூப்பிட்டார்கள். இதையெல்லாம் நினைத்து தற்கொலை செய்து கொள்வது தேவையில்லாத ஒன்று என தெரிவித்தார்.
சோப்பு விற்கும் நிலை:-
ஒரு சமயத்தில் எனக்கு வாய்ப்புகள் இல்லாத போது கூட சோப்பு விற்க தெருதெருவாக சென்று வேலை செய்து ஒரு வேளை மட்டும் தான் சாப்பிட்டேனெ என்று வேதனையுடன் தெரிவித்திருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா.