தல அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்? மர்மநபர் செய்த செயலால் அதிர்ச்சி
ajithkumar
By Edward
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகை அஜித்குமார். வலிமை படத்தின் படப்பிடிப்பு சென்று கொண்டிக்கும் நிலையில் கொரோனா லாக்டவுனால் தள்ளி சென்றே வருகிறது. வலிமை அப்டேட் என்று ரசிகர்கள் பலர் ஏக்கத்துடன் இருந்து வருகிறார்.
இந்நிலையில், மர்ம நபர் ஒருவர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டுள்ளார். அதில் மர்ம நபர், நடிகர் அஜித்தின் ஈஞ்சம்பாக்கத்தில் இருக்கும் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து பரப்பரப்பான பொலிசார் உடனே இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர்.
உடனடியாக அஜித்குமாரின் வீட்டிற்கு சோதனை செய்து வந்தநிலையில் எதுவும் கிடைக்கவில்லை. 2 மணி நேரமாக தீவிர சோதனையில் ஈடுபட்ட பின் மர்ம நபர் குறித்து விசாரணை செய்து கண்டுபிடித்து வருகிறார்கள்.