ஏமாந்துபோன வருண் மணியன்.. பல கோடிகளை ஏமாற்றினாரா நடிகை திரிஷா!! புட்டுப்புட்டு வைத்த AL சூர்யா..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை திரிஷா நடிகர் விஜய்யுடன் பல ஆண்டுகள் கழித்து ஜோடியாக லியோ படத்தில் நடித்திருந்தார். அதேபோல் பொன்னியின் செல்வன் படத்திலும் நடித்திருந்தார். தற்போது கமல், அஜித், சல்மான் போன்ற நடிகர்களின் படங்களிலும் நடித்து வருகிறார். இதற்கிடையில் திரிஷா பற்றி பலர் அவதூறாக பேசி சர்ச்சையை ஏற்படுத்தி வந்தனர்.
சமீபத்தில் கூட மன்சூர் அலிகான், ஏவி ராஜு போன்றவர்கள் திரிஷாவை பற்றி பேசி சிக்கலில் சிக்கி அதற்கான பதிலடியும் திரிஷாவை கொடுக்க வைத்தனர். அதேபோல் சில ஆண்டுகளுக்கு திரிஷா என் மனைவி தான் என்று கூறி ஆன்மீகம் பற்றி பேசி சர்ச்சையில் சிக்கி வரும் ஏ எல் சூர்யா என்பவர் கூறியுள்ளது தற்போது வைரலாகியுள்ளது.
எப்படியாவது பிரபலமாகிவிட வேண்டும் என்பதற்காக திரிஷா தன் மனைவி என்று கூறி வந்தார் ஏஎல் சூர்யா. லியோ படத்தில் நடிகர் விஜய்யுடன் எடுத்த புகைப்படங்களை ஏ எல் சூர்யா சமுகவலைத்தளத்தில் பகிர்ந்து படுமோசமான கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தி பதிவு போட்டுள்ளார்.
சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், திரிஷாவை திருமணம் செய்து கொள்ள வந்த வருண் மணியன், பல கோடி திரிஷாவால் ஏமாற்றப்பட்டார் என்றும் திரிஷா அப்படி என்னென்ன வேலை செய்திருப்பார் என்றும் கூறியிருக்கிறார். திரிஷாவுடன் நட்புடன் இருந்தவர்கள் எல்லோருக்கும் மிகப்பெரிய பிரச்சனை வரும் எனவும் ஏ எல் சூர்யா கூறியிருக்கிறார். இதற்கு ரசிகர்கள் பலர் அவரை கண்டபடி திட்டித்தீர்த்து வருகிறார்கள்.