நடிகரின் நடிப்பில் மயங்கிய மகள்!! அனோஷ்காவுகாக வீட்டுக்கு அழைத்த அஜித்!! சர்ச்சையை ஏற்படுத்திய இயக்குனர்..
தமிழில் வெளியான நேரம் படத்தினை இயக்கியதன் மூலம் இயக்குனரான இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன். அதன்பின் மலையாளத்தில் பிரேமம் படத்தினை இயக்கி மிகப்பெரிய ஹிட் கொடுத்து நல்ல வரவேற்பை பெற்றார். கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கு பின் கோல்டு என்ற படத்தினை பிரத்விராஜ், நயன்தாராவை வைத்து இயக்கினார்.
சமீபத்தில் உடல் நிலை சரியில்லாமல் படுஒல்லியாக மாறி ஆள் அடையாளம் தெரியாமல் போனார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன் மறைந்த தேமுதிக கட்சியில் தலைவரும் நடிகருமான கேப்டன் விஜயகாந்த் மறைவிற்கு ஒரு பதிவினை போட்டு சர்ச்சையை கிளப்பினார். கலைஞர், ஜெயலலிதாவை கொன்றவர்களை கண்டுபிடிக்கும் படி உதயநிதி ஸ்டாலினிடம் கூறியதாகவும் அடுத்து நீங்களும், ஸ்டாலின் சாரும் தான் என்று கூறி பரப்பரப்பை ஏற்படுத்தினார்.
மேலும், நிவின் பாலியும் சுரேஷ் சந்திராவும் அஜித்குமார் அரசியல் வரவுள்ளார் என்று கூறியதை கேட்டதாகவும் பிரேமம் படத்தில் நிவின் பாலியின் நடிப்பை கண்டு வியந்த அஜித் மகள் அனோஷ்காவுக்காக நிவின் பாலியை வீட்டிற்கு அழைத்து பேசியதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனால் அஜித்தை பொதுவெளியிலோ, அரசியல் கட்சியிலோ பார்க்கவில்லை என்றும் வேறு யாரோ உங்களுக்கு எதிராக இருக்கிறார்கள் என்றும் கூறியிருக்கிறார். இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும், ஏனென்றால் நான் உங்களை நம்புகிறேன், பொது மக்களும் நம்புகிறார்கள் என்று அந்த பதிவில் பகிர்ந்துள்ளார்.
இதனை கவனித்த ரசிகர்கள் அல்போன்ஸ் புத்திரனை மருத்துவமனையில் அனுமதியுங்கள் என்ற கருத்துக்களை முன்வைத்து வருகிறார்கள்.

