மகளுக்கு பிடித்த நபரை வீட்டுக்கு அழைத்து பேசிய அஜித்!! பரபரப்பு கிளப்பும் பிரபலம்
நேரம் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன்.
சமீபத்தில் தான் சினிமாவிலிருந்து விலகுகிறேன் என பதிவிட்டு பின் அந்தப் பதிவை தனது சமூக வலைதள பக்கங்களிலிருந்து நீக்கிவிட்டார்.
இந்நிலையில் பிரபல இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் தனது சோசியல் மீடியா பக்கத்தில் அஜித் குறித்து பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில் அவர், அஜித் குமார் அரசியலுக்கு வரப்போகிறார் என்று நிவின் பாலி மற்றும் சுரேஷ் சந்திராவிடமிருந்து நான் தெரிந்து கொண்டேன். ப்ரேமம் படத்தில் நிவின் பாலியின் நடிப்பு அஜித்தின் மகளுக்கு பிடித்து இருந்ததால் அவரை வீட்டிற்கு அழைத்து அஜித் பேசினார்.
தற்போது வரை உங்களுடைய அரசியல் வருகையை பற்றிய தகவல் வரவில்லை. அப்போது அவர்கள் சொன்ன அந்த தகவல் பொய்யாக கூட இருக்கலாம். இது தொடர்பாக அஜித் பேச வேண்டும் ஏனென்றால் நான் உங்களை நம்புகிறேன். பொது மக்கள் உங்களை நம்புகிறார்கள் என்று அல்போன்ஸ் புத்திரன் கூறியுள்ளார்..