550 கோடி ரூபாய்ல வீடு கட்டுனனா? ஷாக்கான சீரியல் நடிகை ஆல்யா மானசா..
ஆல்யா மானசா
விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் செம்பாவாக, ராஜா ராணி 2 மூலம் சந்தியாவாக, சன் டிவியில் ஒளிபரப்பான இனியா தொடர் மூலம் இனியாவாக மக்களை கவர்ந்து வந்தவர் ஆல்யா மானசா. சன் டிவியின் இனியா தொடர் முடிந்ததில் இருந்து அவர் எந்த தொலைக்காட்சி சீரியலில் கமிட்டாவார் என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்தது. சமீபத்தில் பிரம்மாண்டமான முறையில் தன்னுடைய பிறந்தநாளை குடும்பத்துடன் ஆல்யா மானசா கொண்டாடினார்.
சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியின் போது 550 கோடி ரூபாயில் வீடு பற்றியும் விலையுயர்ந்த கார் வாங்கியது பற்றிய செய்தி வெளியானது குறித்து சில தகவலை பகிர்ந்துள்ளார்.
550 கோடி வீடு
அதில், நான் 30வது பிறந்தநாள் கொண்டாடினேன். எல்லா பொண்ணுங்களுக்கும் 30 தாண்டினால் ஆண்டி ஆகிட்டோமே என்ற ஃபீல் இருக்கும், அதை நான் சந்தோஷமா கொண்டாட விரும்பினேன். ஆனால் நாங்கள் அந்த காரை வாங்கவில்லை, 2 மணி நேரத்திற்கு வாடகைக்கு தான் எடுத்தோம்.
ஹவுஸ் போட் நாங்கள் வாங்கவில்லை, அது மணிமேகலையை வைத்து செய்த பிராங்க் வீடியோ தான் என்றும் தெரிவித்துள்ளார் ஆல்யா. மேலும், ரூ. 550 கோடியில் ஒரு வீடு வாங்கினியே அது என்னாச்சுன்னு சிலர் கேட்டாங்க. கேட்கும் போது சிரிப்பா வந்துச்சி.
அதன்பின் மக்கள் அதை நம்பி, சின்ன ஃபேமிலியில் இருந்து வந்த நீங்க, 550 கோடி வீடு வாங்கிட்டிங்களே வாழ்த்துக்கள்ன்னு சொன்னாங்க. அதற்கு நா, ஆமா நீங்க பார்த்தீங்கன்னு தான் சொல்லத்தோணும் என்று ஆல்யா மானசா தெரிவித்துள்ளார்.