சீரியல் நடிகைக்கு திருட்டுத்தனமாக தாலிக்கட்டிய நடிகர்! குழந்தைக்கு பிறகு உண்மையை உடைத்த நடிகை!
திரைத்துறையில் தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் அதிக பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. சீரியல்களில் ஹுட்டிங் தடை நீடித்துக்கொண்டிருக்கும் நிலையில், பிரபலங்கள் பேட்டிகளை கொடுத்து நேரத்தினை கழித்து வருகிறார்கள்.
அதில் சின்னத்திரை ஜோடிகளாக இருந்து லாக்டவுன் சமீபத்தில் குழந்தை பெற்றெடுத்த ஜோடி ஆல்யா மானசா - சஞ்சீவ் ஜோடி. பிரபல தொலைக்காட்சி சீரியலான ராஜா ராணி சீரியலில் நடித்த போது காதல் ஏற்பட்டது. அதன்பின் ஆலியா - சஞ்சீவ் இருவரும் ரியல் ஜோடியாக திருமணம் செய்து தற்போது பெண் குழந்தையும் பெற்றனர்.
இந்நிலையில் தங்களில் திருமணம் குறித்து ஒரு பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளனர். ராஜா ராணி சீரியல் முடிந்த பிறகு ஆலியாவை இழந்து விடக்கூடாது என்பதற்காக சஞ்சீவ் தன்னுடைய பிறந்தாளில் ஆலியாவிற்கு தெரியாமலே கழுத்தில் தாலி கட்டியுள்ளார். இதையடுத்து ஆலியாவீட்டாரிடம் பெண் கேட்டபோது மறுத்து விட்டனராம்.
அதற்கு காரணம் இருவரும் வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால். பின் இதனால் ஆலியா தன் வீட்டினை விட்டு வெளியே வந்தவுடன் சஞ்சீவ் வீட்டின் உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் நிக்காஹ் செய்து கொண்டனர். இதையடுத்து இந்த தகவல் வெளியில் கசிந்ததும் அனைவருக்கும் தெரியப்படுத்தி திருமண வரவேற்பு விழா நடத்தியுள்ளனர்.
மிகச்சிறப்பாக இருவருக்கும் திருமணமாகி தற்போது பெண் குழந்தை அய்லாவுடன் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்று கூறியுள்ளனர் ஆல்யா - சஞ்சீவ் ஜோடி.