மருத்துவத்துறையில் இருந்து விலகிய அனிதா விஜயகுமார்.. காரணம் இதுதான்
தமிழ் திரையுலகில் மூத்த நடிகர்களில் ஒருவர் விஜயகுமார். இவருடைய மகன் அருண் விஜய், மகள்கள் ஸ்ரீதேவி, ப்ரீத்தா, வனிதா ஆகியோர் சினிமாவில் இருந்தாலும், அனிதா விஜயகுமார் மட்டும் நடிக்க வாய்ப்பு வந்த பொது, அதனை மறுத்துவிட்டார்.
ஆம், சினிமா வாய்ப்பை வேண்டாம் என கூறிய அனிதா, மருத்துவத்துறையை தேர்வு செய்து 15 வருடங்கள் எமர்ஜன்சியில் பயணியாற்றி வந்துள்ளார். பின் அதில் இருந்து விலகி சென்னைக்கு வந்து செட்டில் ஆனார் என கூறப்படுகிறது.
இந்த நிலையில், அனிதா விஜயகுமார் ஏன் மருத்துவத்துறையில் இருந்து விலகினேன் என்பது குறித்து பகிர்ந்துள்ளார். இதில் "நான் மருத்துவராக விருப்பப்பட்டேன். எனக்கான தேவைகள் எல்லாவற்றையும் எனது அப்பா மற்றும் அம்மா செய்து கொடுத்தார்கள். 15 வருடங்கள் எமர்ஜென்சில் வேலை செய்தேன்.
பலருக்கும் உயிர் போகும் தருவாயில் குடும்பத்தை பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். எப்போதுமே பணத்தை விட உறவுகள் தான் முக்கியம்.அதனால் தான் என் வேளையில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று விட்டேன். உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.குடும்பத்தோடு நேரத்தை செலவிட வேண்டும்" என கூறியுள்ளார்.