கல்யாணமாகி அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டேன்!! நடிகை அஞ்சலி கூறிய உண்மை
கற்றது தமிழ் படம் மூலம் சினிமாவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர் நடிகை அஞ்சலி. பல ஆண்டுகளாக சினிமாத்துறையில் இருக்கும் அஞ்சலி சரியான ஒரு இடத்தினை பிடிக்கமுடியாமல் தவித்து வருகிறார். இதனால் கவர்ச்சி ரூட்டுக்கு சென்று தெலுங்கு சினிமா பக்கம் நடித்து வருகிறார்.
இடையில் நடிகர் ஜெய்யுடன் காதலில் இருந்து சில காரணங்களால் பிரிந்துவிட்டதாகவும் செய்திகள் கசிந்தது. சமீபத்தில் நடிகை அஞ்சலி கொடுத்த பேட்டியொன்றில், நான் மோசமான ஒரு உறவில் இருந்ததாகவும் அந்த உறவு விஷமத்தனமான உறவு. தாமதமாகத்தான் அதை பற்றி புரிந்து கொண்டதாகவும் கூறியிருக்கிறார்.
சமீபத்தில் அளித்த பேட்டியில் உங்களை பற்றிய கிசுகிசு பற்றி கேட்கப்பட்டது. ஜெய்யுடன் காதலில் இருப்பதாகவும் கதையை அவர் தான் கேட்கிறார் என்றும் கூறினார்கள்.
என் கதையை நான் தான் கேட்கிறேன் என்றும் எனக்கு சினிமாவில் நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள் என்னை பற்றி எழுத வேண்டும்? யாருடன் என்னை இணைத்து எழுத வேண்டும் என்று அவர்களே முடிவு செய்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.
ஒருமுறை நான் கல்யாணம் பண்ணி அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டேன் என்ற செய்தியும் வெளியாகியது. அதை நினைத்து எனக்கு சிரிப்பு தான் வந்ததாகவும் எனக்கே தெரியாத என் திருமண செய்தியை படித்ததும் சிரித்துவிட்டேன் அதை மறக்க நினைக்கிறேன் என்று கூறியிருக்கிறார் அஞ்சலி.