டகால்டி காட்டும் அமலா பால் கைதா?.. திருமண விவகாரத்தில் படுமோசமாக பேசிய பயில்வான் ரங்கநாதன்..
சினிமா நட்சத்திரங்களின் அந்தரங்கம், படத்தின் சர்ச்சை காட்சிகள் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி அவதூறாக பேசி வருபவர் பயில்வான் ரங்கநாதன். பல சர்ச்சைகளிலும் கண்டனங்களிலும் சிக்கி வரும் பயில்வான் தற்போது நடிகை அமலா பாலின் திருமணம், விவாகரத்து, இரண்டாம் திருமணம், வழக்கு குறித்து பகிரங்கமாக உண்மைகளை கூறியுள்ளார்.

முதல் திருமணம் விவகாரம்
சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் சர்ச்சை நடிகையாக அறிமுகமாகி ஏ எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார் அமலா பால். ஏ எல் விஜய்யின் அப்பா வேண்டாம் வேண்டாம் என்று கூறியும் அமலா பாலை திருமணம் செய்து கொண்டார்.
இரண்டே ஆண்டுகளில் அமலா பால் சுயரூபம் தெரிய இருவரும் விவாகரத்து செய்தனர். அதன்பின் விஜய் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார் விஜய். பின் அமலா பால் ஆடை படத்தில் ஆடையின்றி நடித்து ஏமாற்றத்தை கண்டார்.
கைது செய்யப்படுவாரா அமலா பால்
யாரும் வாய்ப்பு கொடுக்காமல் இருந்த நிலையிலும் அந்தமாதிரியான வாய்ப்பு மட்டும் வருவதால் மன வருத்தத்தில் இருந்தார். இதனை தொடர்ந்து அமலா பால் வட இந்தியரான பவீந்தர் சிங் என்பவருடன் ரகசிய திருமணம் செய்து கொண்டு புகைப்படத்தை அமலா பால் வெளியிட்டார்.
இது வெறும் போட்டோஷூட் தான் என்று சமாளித்தார். சென்னை, வானூரில் ஒரு பங்களாவில் அமலா பால் - பவீந்தர் சிங்குடன் வாழ்ந்து வந்தார் என்ற ஆதரமும் இருக்கிறது என்று கூறியுள்ளார் பயில்வான்.

மேலும் தன்னை 70 லட்சம் கேட்டும் பலான புகைப்படங்களை வெளியிடுவேன் என்று அமலாபால் புகாரளித்ததால் பவீந்தர் சிங் மற்றும் குடும்பத்தினர் கைது செய்யப்பட்டார்கள். தான் விரித்த வலையில் அவரே சிக்குவது போல், திருமணம் நடந்து விட்டதாக கூறி பதிவு திருமண சான்றிதழை ஒப்படத்தார்.
கோடிஸ்வரன் வீட்டு பையன் அமலா பால் திருமணம் செய்து கொள்வாரா என்றும் கூறியிருக்கிறார் பயில்வான். இப்படி இருவர் மீது புகார் அடிப்படையில் வழக்கு சென்று கொண்டிருப்பதால் அமலா பாலும் கைது செய்யப்படலாம் என தெரிவித்துள்ளார்.
