திருநங்கை போல் படம் எடுத்தால்.. பொறுமையை ஏன்டா சோதிக்கிறீங்க!! அரண்மனை 4-ஐ வெச்சு செய்த பயில்வான்...

Sundar C Tamannaah Gossip Today Bayilvan Ranganathan Aranmanai 4
By Edward May 03, 2024 03:30 PM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழ்ந்து வரும் சுந்தர் சி, நடிகை தமன்னா, ராஷி கன்னா, யோகி பாபு, கோவை சரளா உள்ளிட்ட பல நட்சத்திரங்களை வைத்து அரண்மனை 4 படத்தினை இயக்கி இருந்தார். இன்று முதல் உலகமெங்கும் பல மொழிகளில் படம் வெளியாகியுள்ளது. படத்தை பார்த்த பலருன் நன்றாக இருக்கிறது என்று பாசிட்டிவ் விமர்சனங்களை கூறி வருகிறார்கள். மேலும் ஒருசிலர் எதிர்மறையான விமர்சனத்தை கொடுத்து வருகிறார்கள்.

திருநங்கை போல் படம் எடுத்தால்.. பொறுமையை ஏன்டா சோதிக்கிறீங்க!! அரண்மனை 4-ஐ வெச்சு செய்த பயில்வான்... | Bayilvan Review Aranmanai 4 Trolls Viral

தற்போது படத்தினை பார்த்த பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன், அரண்மனை 4 படத்தை கலாய்த்த படி வெச்சு செய்திருக்கிறார். தலைப்பே சரியாக வைக்கத்தெரியாதவர்கள் தான் பார்ட் 1, பார்ட் 2, பார்ட் 4ன்னு எடுப்பாங்க, அந்த வரிசையில் இது ஒரு படம். ஆரம்பத்தில் ஒரு குட்டி கதை செல்ல, ஒருத்தி பேயாக மாறுகிறாள். நீ என் தங்கச்சிய கொன்னுட்டல நீ என் தங்கச்சியா நடிக்கனும் என்று அவனும் செத்துடுறான். ஏன் டா எங்க பொறுமை ஏன்பா சோதிக்கிறீங்க, கிட்டத்தட்ட 60, 70 படம் இதேமாதிரி பார்த்துட்டோம். மனசும் உடம்பும் மறத்துப்போச்சு.

திருநங்கை போல் படம் எடுத்தால்.. பொறுமையை ஏன்டா சோதிக்கிறீங்க!! அரண்மனை 4-ஐ வெச்சு செய்த பயில்வான்... | Bayilvan Review Aranmanai 4 Trolls Viral

தமன்னா தான் எல்லாரையும் பேயாக இருந்து காப்பாத்து-து. ஒரு பேய் பங்களாவை விக்கிற கதையை எத்தனை படத்துலடா எங்களை மொக்கை அடிப்பீங்க, போதும்டா சாமி, அழுதுடுவேன். யோகி பாபு காமெடிக்கு யாரும் சிரிக்கல, குழந்தைகள் கூட சிரிக்கல. அழகா இருக்க தமன்னா, பேயுடைய சாயல் இல்லை. ராஷி கன்னா, நீங்கள் டாக்டர் தான் பேய் வீட்டில் பேஷண்ட் குழந்தைகளை வெச்சுருக்கீங்க என்று கலாய்த்து பேசி இருக்கிறார்.

பல கோடி ஏமாந்த வருண் மணியன்.. திரிஷாவுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு இதான் நடக்கும்!! AL சூர்யா

பல கோடி ஏமாந்த வருண் மணியன்.. திரிஷாவுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு இதான் நடக்கும்!! AL சூர்யா

விடிவி கணேஷும் யோகி பாபுவும் ராஷி கன்னா வயசென்ன உங்க வயசென்ன என்று கிழித்து பேசியிருக்கிறார் பயில்வான். முகத்தில் எந்தவித நடிப்பு, மாடுலேஷன் இல்லாமல் பேசுறாரு. காமெடியும் இல்லாமல் பயமும் இல்லாமல், அந்தரத்தில் தொங்கவிட்டு, திருநங்கை போல் படம் எடுத்தால் எப்படி. இந்த மூன்று பார்ட்டில் வந்த சீன்கள் அப்படியே அரண்மனை 4ல் வந்து இருக்கு, ஏன் வித்தியாசமாக எடுக்கவில்லை என்று கடுமையாக சுந்தர் சி-யை கலாய்த்து விமர்சித்திருக்கிறார்.