3 திருமணம் செய்த நீ பேசலாமா? பலான நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகையை வெளுத்து வாங்கிய பயில்வான்
தமிழ் சினிமாவில் சமீபகாலமாக நடிகர் நடிகைகள் தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட பிரபலங்களின் அந்தரங்க செய்திகளை அவதூறு வார்த்தையில் பேசி வருவதாக குற்றம் சாட்டப்பட்டு வருபவர் பயில்வான் ரங்கநாதன்.
எம்ஜிஆர் முதல் தற்போதைய இளம் நடிகைகள் வரை விட்டுவைக்காமல் கடுமையாக விமர்சித்து சிக்கலிலும் சிக்கி வருகிறார். அந்தவகையில் நடிகையும் டாக்டருமான ஷர்மிளா பயில்வான் ரங்கநாதன் பற்றி அவரது யூடியூப் சேனலில் கேவலமாக பேசியிருக்கிறார்.
இதை கேள்விப்பட்ட பயில்வான் சமீபத்திய யூடியூப் பேச்சி ஷர்மிளாவை கண்டபடி வெளுத்து வாங்கியுள்ளார். 3 முறை திருமணம் செய்து விவாகரத்தான நடிகை என்னைப்பற்றி பேசியுள்ளார். எனக்கு ஒரு மனைவி, ஒருமகன் இரண்டு மகள்கள்.

நான் நடிகர்ன் தான் ஆனால் எனக்கு காதலியும் செட்டப்பும் இல்லை. என்னை பற்றி அவதுறாக பேசிய ஷர்மிளா, இரவு 11 மணி முதல் 1 மணி வரை நடத்திய புதிரும் புனிதமும் நெற நிகழ்ச்சியில் தான் பிரபலமானார்.
டாக்டாராக இருந்து பலான கேள்விகளுக்கு பதிலளிக்கும் மருத்துவர் நிகழ்ச்சி தான் அது. காசுக்காக சீரியல் நடிகையாக மாறிவிட்டார். மருத்துவத்துறையிலேயே க்ளீனிக் வைத்து பிழைக்கலாமே. ஏன் நடிப்பு என்று கண்டபடி கேட்டுள்ளார்.
மேலும் 3 விவாகரத்து செய்த நடிகை நீங்கள் என்னை பற்றி பேசலாமா என்று காண்டமாகவும் கூறியுள்ளார் பயில்வான்.
