திவ்யா சத்யராஜுக்கு திருமணமாகி விவாகரத்தாகிடுச்சு..டார்ச்சர் கொடுத்தாரு!! பயில்வான் ஓபன் டாக்..
திவ்யா சத்யராஜ்
நடிகர் சத்யராஜின் மகளும் திமுக உறுப்பினருமான திவ்யா சத்யராஜ், சில நாட்கலுக்கு முன் ஒரு பெண்ணுக்கு ஒரு ஆணை பிடித்திருந்தால் திருமணம் செய்து கொள்ளாமலேயே அவருடன் இணைந்து வாழலாம், குழந்தை கூட பெற்றுக்கொள்ளலாம். திருமணம் என்பது அவசியமான ஒன்றில்லை என்று பேசியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பயில்வான் ரங்கநாதன் இதுகுறித்து பேசி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

அதில், திவ்யா சத்யராஜை இதற்கு முன் நான் பார்த்ததே இல்லை. 4 ஆண்டுகளுக்கு முன் தான் சத்யராஜின் மகள் திவ்யா என்றும் அவர் ஊட்டச்சத்து நிபுணர் என்றும் எனக்கு தெரிந்தது. இதுவரையில் நான் சத்யராஜின் வீட்டிற்கு சென்றதே இல்லை. இன்டர்வியூ சம்பந்தமாக தான் நான் சிலமுறை சந்தித்து பேசியிருக்கிறேம். ஒரு நாளும் நான் சத்யராஜிடம் பணம் வாங்கியதில்லை. இது என் தாய் மீது சத்தியம்.
உண்மையில் சத்யராஜ் எனக்கு பணம் கொடுத்தாரா என்பதை நீங்க உங்க அப்பாவிடமே கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். ஏனென்றால் சத்யராஜ் பத்திரிக்கையாளர்களுக்கு ஒரு ரூபாய் கூட தரமாட்டார்.

திருமணமாகி, விவாகரத்து
திவ்யா சத்யராஜ் எனக்கு திருமணமாகவில்லை, நான் சிங்கிள் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார் உண்மையில் திவ்யா சத்யராஜுக்கு 18 வயதிற்கு முன்பே திருமணமாகி, விவாகரத்தும் ஆன விஷயம் யாருக்காவது தெரியுமா? ஆனால் திவ்யா சத்யராஜ் எனக்கு திருமணமாகவில்லை என்று பெருமையாக பேசியிருக்கிறார்.
சத்யராஜுக்கு கோயம்புத்தூரில் ரேஸ்கோஸில் ஒரு பிளாட் இருக்கிறது. அங்கு நான் குறிப்பிட்ட 50 பேரை மட்டுமே அழைத்து திவ்யா சத்யராஜுக்கு திருமணத்தை நடத்தி வைத்தார் சத்யராஜ். திவ்யா சத்யராஜின் கணவர் வேறு யாருமில்லை, சத்யராஜின் உடன் பிறந்த சகோதரி கல்பனாவின் மகன் மகேந்திரன் மன்றாடியாரை தன்னுடைய மக்ளுக்கு திருமணம் செய்து வைத்தார்.

திருமணமான அடுத்த 5 நிமிடத்திலேயே திவ்யா தன்னுடைய கழுத்தில் இருந்த தாலியை கழற்றி வீசிவிட்டு சென்றுவிட்டார். அதன்பின் சத்யராஜ் தன்னுடைய மருமகனுடன் கெஞ்சி கேட்டுக் கொண்டதால் மருமகன் அனுசரித்து கிட்டத்தட்ட 154 ஆண்டுகள் ஒன்றாக இருவரும் வாழ்ந்தனர்.
ஆனால் தினமும் திவ்யாவின் டார்ச்சர் தாங்க முடியவில்லை என்று மகேந்திரன் புலம்புயிருக்க, ஒரு கட்டத்தில் திவ்யாவின் டார்ச்சர் அதிகமானதால் இதற்கு மேல் இவருடன் சேர்ந்து வாழமுடியாது என்று சத்யராஜிடம் சொல்லிவிட்டு கிளம்பி இருக்கிறார். இதுதான் திவ்யா சத்யராஜின் திருமண வாழ்க்கை. இதை நான் இப்போது சொல்வதற்கு காரணம் என்னவென்றால், நீ என்னைப் பற்றி ஒரு பொய்யை சொன்னதால் இப்பொழுது உன்னுடைய வண்டவாளம் தண்டவாளத்திற்கு வந்துவிட்டது என்று பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.