திருமணமாகியும் பிரிந்து வாழ்கிறோம்..வேதனையா இருக்கு..ஆனா!! நடிகை பாவனி ரெட்டி ஓபன் டாக்..
பாவனி ரெட்டி - அமீர்
சின்னத்திரை சீரியல் நடிகையாக திகழ்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானவர் தான் நடிகை பாவனி ரெட்டி. பிக்பாஸ் நிகழ்ச்சியில் சக போட்டியாளரும் நடன கலைஞருமான அமீருடன் காதலில் இருந்தார்.
நிகழ்ச்சிக்கு பின் பல ஆண்டுகள் கழித்து அமீரை திருமணம் செய்து கொண்டார் பாவனி. இந்நிலையில் அமீருடன் ஒரு பேட்டியொன்றில் பாவனி பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

பிரிந்து வாழ்கிறோம்
அதில், அமீரின் ஆசைக்கும் கனவுக்கும் நான் மதிப்பளிக்கிறேன். நான் சென்னையில் இருந்தால் அமீர் என்னுடன் தான் எப்போதும் இருப்பார். அதனால் அவரது இலக்கை நோக்கி அவரால் ஓடமுடியாது. இதற்காக இருவரும் தற்போது பிரிந்து வாழ்கிறோம்.
நான் ஹைதராபாத்தில் இருக்கிறேன், அவர் நண்பர்களுடன் இருக்கிறார். எனக்கு சென்னைக்கு வரும் வேலை இருந்தால் ஹோட்டலில் தங்குகிறேன், அங்கு வந்து என்னை சந்திப்பார். இது எனக்கு வருத்தமாக இருந்தாலும், இருவரும் சேர்ந்து இந்த முடிவை எடுத்திருகிறோம்.

இதில் எனக்கு உடன்பாடில்லை, ஆனால் அமீர் மிகவும் கில்டியாக ஃபீல் செகிறார். இதனால் அவரின் விருப்பப்படி நாங்கள் இருவரும் திருமணமாகி தனித்தனியாக பிரிந்துதான் வாழ்ந்து வருகிறோம் என்று பாவனி தெரிவித்துள்ளார்.