16 லட்சம் பணப்பெட்டியோடு அம்மாவான பிக்பாஸ் பிரபலம் பூர்ணிமா!! வெளியான புது தகவல்..
பிக்பாஸ் 7 நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த வாரம் முழுவதும் பல டாஸ்க்குகள் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டு வந்த நிலையில், பணப்பெட்டியையும் பிக்பாஸ் வைத்திருந்தார்.
ஆரம்பத்தில் சிறிய தொகையாக இருந்த பணப்பெட்டி போகப்போக அதிகரித்துக்கொண்டிருந்தது. யார் தான் அந்த பெட்டியை எடுப்பார் என்ற கேள்வி எழுந்து வந்த நிலையில் பூர்ணிமா சுமார் 16 லட்சம் மதிப்புள்ள பணப்பெட்டியை உசாராக எடுத்து வீட்டைவிட்டு வெளியேறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் பூர்ண்மா பிக்பாஸ் வீட்டிற்கு போவதற்கு முன் நயன் தாரா நடிப்பில் உருவான அன்னப்பூரணி படத்தில் சிறு ரோலில் நடித்திருந்தார். தற்போது பூர்ணிமா ஓடிடி தளத்தில் வெளி வரவுள்ள ஒரு புது படத்தில் கதாநாயகியாக நடிக்கவிருக்கிறாராம்.
செவப்பி என்று பெயரிடப்பட்ட இப்படத்தில் பூர்ணிமா ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடிக்க இருக்கிறாராம். ஓரளவிற்கு முடிந்துள்ள இப்படத்தில் மீண்டும் இணைந்து நடிக்கவிருக்கிறார் பூர்ணிமா. தற்போது அப்படத்தின் போஸ்டர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

