சிவகார்த்திகேயனை விஜய் வளர விடமாட்டார்!! தளபதி போட்ட பிளான் இதான்.. பிரபலம்..
தமிழ் சினிமாவில் டாப் நடிகர்கராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் தொழிட்நுட்ப பணிக்காக வெளிநாட்டுக்கு சென்றுள்ள நிலையில் விரைவில் விஜய் சென்னை திரும்பவுள்ளார். விஜய் குறித்து, விமர்சகர்கள் பலர் பலவிதமான கருத்துக்களை முன் வைத்து வருகிறார்கள்.
சமீபத்தில் சினிமா விமர்சகர் பிஸ்மி அளித்த பேட்டியொன்றில், சிவகார்த்திகேயன் கேமியோ ரோலில் விஜய்யின் கோட் படத்தில் நடிக்கவுள்ளார் என்பதை ஆரம்பத்தில் நான் நம்பவில்லை. ஆனால், இது உண்மை தான். விஜய் அரசியலுக்கு செல்கிறார் என்றதும், அடுத்த விஜய் சிவகார்த்திகேயன் தான் என்று பலர் கூற ஆரம்பித்துவிட்டார்கள். இந்த சூழலில் கோட் படத்தில் சிவகார்த்திகேயன் எப்படி வந்தார் என்பது தான் என் கேள்வி.
ஒருவேளை சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை வெங்கட் பிரபு இயக்குவதால் விஜய்யிடம் அவர் பேசியிருக்கலாம். சிவகார்த்திகேயன் கோட் படத்தில் நடித்தால் அப்படத்திற்கு எந்த நன்மையும் வரப்போவதில்லை. விஜய்க்காக தான் கோட் படத்தை பார்க்க சிவகார்த்திகேயன் செல்வார்.
ஆனால் விஜய் என்ன நினைப்பார் என்றால், இந்த படத்தில் சிவகார்த்திகேயனை நடிக்க வைப்பதால், அவரின் ரசிகர்கள் மனதில் இடம் பெற்று இதன்மூலம் 2026 ஆம் ஆண்டு தேர்தலுக்கு வசதியாக இருக்கும் என்ற கணக்கை போட்டிருப்பாரே தவிர சிவகார்த்திகேயனை வளரவிட மாட்டார் விஜய் என்று கூறியிருக்கிறார் பிஸ்மி.
அப்படி கோட் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருந்தாலும் பெரிய ரோல் எல்லாம் இருக்காது, ஏதோ ஒரு காட்சியில் வந்துவிட்டு போவார்.தற்போதையை காலக்கட்டத்தில் சினிமா என்பது மாறிவிட்டது. நடிகர்களுக்கு கொடுக்கும் சம்பளத்தை எப்படி திரும்ப எடுப்பது என்ற நிலை உருவாகி இருப்பதால், இத்துப்போன கதையாக இருந்தாலும் அதை பான் இந்தியா படமாக வியாபாரமாக்க பார்க்கிறார்கள் என்று பிஸ்மி தெரிவித்துள்ளார்.