விஜய் - சங்கீதா விவாகரத்து இருக்கட்டும்!! இந்திய சினிமாவில் காஸ்ட்லி விவாகரத்து ஜீவனாம்சம் இதுதான்..
விஜய் - சங்கீதா விவாகரத்து
செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் நடிகரும், தவெக தலைவர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனுதாக்கல் செய்திருந்த விவகாரம் தற்போது வரை பெரியளவில் பேசப்பட்டு வருகிறது.

நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் என் கணவர் விஜய் இருக்கிறார் என்ற பல காரணங்களை கூறி விவாகரத்து மனு அளித்தார் சங்கீதா. இதனையடுத்து தனக்கு ஜீவனாம்ச தொகையை வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த விவாகரத்து வழக்கில் சங்கீதாவிற்கு சாதகமாக வந்தால், விஜய் எத்தனை கோடி சங்கீதாவிற்கு ஜீவனாம்சமாக கொடுப்பார் என்ற கேள்வி எழுந்து வருகிறது.
காஸ்ட்லி விவாகரத்து ஜீவனாம்சம்
இந்நிலையில், இந்திய சினிமாவில் தற்போதைய நிலவரப்படி மிகவும் அதிகத்தொகை ஜீவனாம்சமாக பேசப்பட்டது எந்த நடிகரின் விவாகரத்து என்ற தகவல் வெளியாகியுள்ளது.
உலகளவில் அமேசன் நிறுவனர் ஜேஃப் பெசோஸ் - மெக்கென்சி ஸ்காட் மற்றும் பில் கேட்ஸ் - மெலிண்டா ஆகியோரின் திருணங்களில், மனைவிகள் தங்கள் கணவரின் சொத்துக்களில் பெரும் பகுதியை ஜீவனாம்சமாக பெற்றுள்ளனர்.

இந்தியாவை பொறுத்தவரையில், ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு - மனைவி பிரமிளா ஸ்ரீனிவாசன் விவாகரத்து வழக்கு தற்போது நடந்து வருகிறது. இதில், ரூ. 15000 கோடி ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என்று உத்திரவிடப்பட்டது. இந்தியாவின் மிக உயர்ந்த விவாகரத்து ஜீவனாம்ச வழக்காக இதுதான் இருக்கிறது.

இந்திய சினிமாவில்
சினிமா உலகை பொறுத்தவரையில், மிக அதிக தொகை ஜீவனாசமாக பேசப்பட்டது நடிகர் ஹிருத்திக் ரோஷன் - சுசான் கான் தம்பதியினருடையது தான். 4 ஆண்டுகள் காதலித்து 2000ஆம் ஆண்டு திருமணம் செய்த இந்த ஜோடி, இரு மகன்களை பெற்றெடுத்தனர். 14 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்குப் பின் 2013ல் பிரிவதாக அறிவித்தனர்.
பல காரணங்கள் விவாகரத்துக்கு சொல்லப்பட்ட நிலையில், விவாகரத்து செய்தியைவிட, ஜீவனாம்ச தொகை பேசப்பட்டது தான் இந்தியாவையே அதிரவைத்தது. சுசான் கான், தன்னுடைய வாழ்க்கை மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் எடுத்து, ரூ. 400 கோடி கேட்டதாகவும், இறுதியில் ஹிருத்திக் ரோஷன் ரூ.380 கோடி வழங்க ஒப்புக்கொண்டதாகவும் கூறப்பட்டது.

இருப்பினும் இந்த தகவல் பரவியதால் இது போன்ற செய்திகள் கற்பனையானவை, ஒருவரை அவமானப்படுத்துபவை என்று கூறியிருந்தார். இன்றுவரை இந்த தொகைப்பற்றி ரகசியமாகவே இருந்து வருகிறது. சந்தேகத்திற்கு உள்ளானாலும் இந்திய சினிமா வரலாற்றில் ஒரு விவாகரத்துக்காக கொடுக்கப்பட்ட அதிகபட்ச தொகையாக இதுவரை கருதப்பட்டு வருகிறது.

தென்னிய சினிமா
தென்னிய சினிமாவை பொறுத்தவரை, நடிகை சமந்தாவுக்கு, நாக சைதன்யா விவாகரத்து ஜீவனாம்சமாக ரூ. 200 கோடி கொடுப்பதாக முன்வந்தனர். ஆனால், சமந்தா அதை ஏற்க மறுத்துவிட்டதாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.