சபானாவுடன் சண்டை..காரணம் சொல்லதேவையில்ல!! கயல் சிரீயல் நடிகை சைத்ரா ரெட்டி ஓபன்..
சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அதில், மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்ற சீரியல்களில் ஒன்று கயல். இதில், சைத்ரா ரெட்டி மற்றும் சஞ்சீவ் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர்.
நாயகிகளில் டாப் நடிகையாக வலம் வரும் நடிகை சைத்ரா, ராகேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 5 ஆண்டுகள் கடந்தும் குழந்தை பெற்று கொள்ளாமல் இருக்கும் இவரிடம் குழந்தை குறித்த கேள்வி எழுந்த நிலையில், அனைவரும் குட்டி சைத்து எப்போ, குழந்தை எப்போ என்று கேட்கின்றனர்.
நாங்களும் வரும்போது வரட்டும் என்று தான் காத்திருக்கிறோம். ஆனால் எப்படியும் இரண்டு ஆண்டுக்குள் ஒரு குட்டி சைத்து வந்துருவாங்க. குழந்தை என்றால் பிடிக்காதவர்கள் யாராவது இருக்க முடியுமா? தற்போது சில கமிட்மெண்ட் உள்ளது. அதையும் கவனித்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
சபானாவுடன் ஏற்பட்ட பிரச்சனை
மேலும் நடிகை சபானாவுடன் ஏற்பட்ட பிரச்சனை குறித்து பேசிய சைத்ரா, நானும் நக்ஷத்ராவும் சண்டைப்போட்டதில்லை, நானும் ரேஷ்மாவும் சண்டைப்போட்டதில்லை. ஆனால் எங்களுக்கும் சபானாவுக்கு சண்டை வந்துச்சு, சரியாகிவிடும்.
எல்லார்க்குள்ளயும் இருப்பதுதானே, சண்டை யார் போடவில்லை, சமீபகாலமாக நாங்கள் பேசுவதில்லை, அதற்கான காரணம் என்ன என்று தெரியத்தேவையில்லை என்று சைத்ரா ரெட்டி தெரிவித்துள்ளார்.