விஜய் கொடுத்த வாய்ப்பு? இன்று வரை ஏமாற்றத்தையே சந்தித்து புலம்புத் தள்ளும் இயக்குனர்கள்..
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். பீஸ்ட் படத்திற்கு பிறகு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி 66 படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக நடித்து வருகிறார். முன்னணி நட்சத்திரங்களின் கூட்டணியில் படத்தின் ஷூட்டிங் சென்னை, ஹைதராபாத் என நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஜூன் 22 ஆம் தேதி விஜய் தன்னுடைய 48 வது பிறந்த நாளை கொண்டாடவுள்ளார். அதற்காக தளபதி ரசிகர்கள் கொண்டாட காத்திக்கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் இயக்குனர் சேரன் விஜய்யை வைத்து ஒரு படத்தினை இயக்க முடியாமல் போனது பற்றி பேசியுள்ளார்.
சாய் வித் சித்ரா என்ற பேட்டியில் இயக்குனர் சித்ரா லட்சுமனனிடம், ஆட்டோகிராப் படத்தை பார்த்து விஜய் என்னிடம் ஒரு நாள் கதை கேட்டு இருந்தார். தவமாய் தவமிருந்து படத்தின் போது தான் சுமார் 3 மணி நேரம் விஜய்க்கு கதையை கூறினேன்.
அவரும் ஆர்வத்துடன் கதையை கேட்டுக்கொண்டார். அப்போது தவமாய் தவமிருந்து படத்தின் வேலைகளில் பிசியாக இருந்ததால் படத்தில் படப்பிடிப்பு காலம் தள்ளிசென்றே வந்தது. இதனால் அவரின் கால்ஷீட் படம் இருந்ததால் விஜய் படத்தினை இயக்க முடியாமல் போனது. இதற்கு நான் தான் காரணம் என்றும் தெரிவித்துள்ளார். இந்த தவறால் என் வாழ்க்கையில் பல முன்னேற்றத்தை இழந்தேன் என்று கூறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.