8 ஆண்டுகளுக்கு பிறகு ரெட்டை குழந்தை? கேவளமாக பேசியவர்களுக்கு பதிலடி கொடுத்த சின்மயில்..
தென்னிந்திய சினிமாவில் பின்னணி பாடகியாக இருப்பவர் பாடகி சின்மயி. பல தமிழ் படங்களில் பாடிய சின்மயி 2014ல் இயக்குனர் ராகுல் ரவிந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி பல பாடல்களில் பாடி வந்த சின்மயி மீடு பிரச்சனைக்கு ஆதரவாக சமுக கருத்துக்களை இணையத்தில் பேசி வருகிறார்.
மீடு பிரச்சனை
பலர் தன்னிடம் கூறும் பாலியல் தொல்லை தகவல்களை பகிர்ந்து அதற்காக பேசியும் வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன் வைரமுத்து தன்னை தவறாக நடத்தினார் என்று புகாரளித்து அவர் பற்றிய பல செய்திகளை கடுமையாக விமர்சித்தும் வருகிறார். சமீபத்தில் 8 வருடங்களுக்கு பிறகு அவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது.

இரட்டை குழந்தை
அதை புகைப்படத்தோடு செய்தியை வெளியிட்டிருந்தார். இதற்கு ஒருசில யாருடைய குழந்தை, வாடகைத்தாய் மூலம் பெற்றீர்களா என்று கடுமையாக கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
இதையடுத்து வைரமுத்துவுடன் தொடர்புபடுத்தி சிலர் கூறும் கருத்துக்கள் முகம் சுளிக்க வைத்துள்ளது. இதற்கு சின்மயி பதிலடி கொடுக்கும் வண்ணம் பதிலளித்துள்ளார்.
