எல்லைமீறி பேசிய என்னை அந்த நடிகர் பளார் விட்டார்! பல ஆண்டு உண்மையை உடைத்த பயில்வான்!
தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்தும் உடற்கட்டுக்கோப்பாக வைத்து வில்லனாகவும் நடித்து கொடிக்கட்டி பறந்தவர் நடிகை பயில்வான் ரங்கநாதன். நடிப்பு தவிர்த்து பிரபல பத்திரிக்கையில் பணியாற்றி பத்திரிக்கையாளராக இருந்து வைரல் செய்திகளை எழுதியும் வந்தார்.
சமீபத்தில் பல யுடியூப் சேனலுக்கு பேட்டியளித்து வரும் பயில்வான், சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் ஒரு நடிகர் தன்னை உண்மையில் பளார் விட்டதை பற்றி கூறியுள்ளார். ஒரு முறை சூட்டிங் போகும்போது ஒரிஜினல் ஆகவே தெலுங்கு சூப்பர் ஸ்டார் ஆன சிரஞ்சீவிடம் அடி வாங்கி உள்ளார்.
சென்னை 600028 படத்தில் ஜெய் எப்படி பாத்ரூமில் போய் அழுது கொள்வாரோ அதேபோல் பயில்வான் ரங்கநாதன் ஷூட்டிங் ஸ்பாட்டை விட்டு வெளியே வந்து தேம்பித் தேம்பி அழுதுள்ளார். அதை பார்த்த பாரதிராஜா யோ அழுகிற உடம்பா இது என அவரை தேற்றியுள்ளார்.
இதுபோல் நடிகர் பயில்வான் எம்ஜிஆரிடம் அடிவாங்கியதை மறக்கமுடியாது என்றும் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.