ரஜினியின் மனைவிக்கு பிடிவாரண்ட்.. லதா ரஜினிகாந்த் மீது இத்தனை மோசடி வழக்கா?

By Dhiviyarajan Dec 31, 2023 09:15 AM GMT
Report

சினிமா பிரபலங்களை தரக்குறைவாக பேசி சர்ச்சையில் சிக்குவதை வழக்கமாக வைத்துள்ள பயில்வான் ரங்கநாதன் தற்போது லதா ரஜினிகாந்த் குறித்து பல விஷயங்களை பேசி இருக்கிறார்.

அதில் அவர், ரஜினிகாந்த் மகள் இயக்கத்தில் வெளியான கோச்சடையான் திரைப்படம் மிக பெரிய தோல்வியை சந்தித்தது. இப்படம் வெளியாக்குவதற்கு முன்பு ஒரு நிறுவனத்திடம் 6 கோடிகடன் வாங்கினார். இதற்கு லதா ரஜினிகாந்த் உத்தரவாதம் கையெழுத்து போட்டார். ஆனால் பல ஆண்டுகள் ஆகியும் லதா ரஜினிகாந்த் கடனை திருப்பி கொடுக்கவில்லை.

இதனால் வழக்கு தொடரப்பட்டது.வாங்கிய 6 கோடியை மிகவும் சுலபமாக லதா ரஜினிகாந்தால் கொடுத்து விட்டு சென்று விட முடியும். ஆனால் செய்ய மறுக்கிறார் இந்த வழக்கு 10 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக லதா ரஜினிகாந்திடம் நீதிமன்றம் பலமுறை கூறியும், அவர் அதை பொருட் படுத்தாமல் இருந்து வந்தார்.

இதைத்தொடர்ந்து லாத ரஜினிகாந்த் மீது நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. அதனால் தான் அண்மையில் அவர் இந்த விவகாரம் தொடர்பாக பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

ரஜினியின் மனைவிக்கு பிடிவாரண்ட்.. லதா ரஜினிகாந்த் மீது இத்தனை மோசடி வழக்கா? | Court Issued Arrest Warrant To Latha Rajinikanth

சென்னையில் உள்ள தேனாம்பேட்டையில் லதா ரஜினிகாந்த ஒரு ஜவுளிக்கடை வைத்து இருந்தார். அந்த கடைக்கு வரி காட்டவில்லை அதனால் வழக்கு தொடரப்பட்டது.

ரஜினிகாந்த் பெயரை கெடுப்பதற்காக இப்படியெல்லாம் பண்றாங்களானு தெரியல. அதுமட்டுமா, ரஜினிகாந்த் கல்யாண மண்டபத்திற்கு முறையாக வரி கட்டவில்லை. அதற்கும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த மாதிரி அவர் மீது பல வழக்குகள் இருக்கிறது என்று பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

பொறுப்பு துறப்பு: பத்திரிகையாளர் பயில்வானின் இந்த பேச்சுக்கு எங்களுடைய விடுப்பு பக்கத்திற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை.