5 பேரை ஒரே நேரத்தில் காதலிப்பதுதான் தப்பு! இரண்டாம் காதல் பற்றி ஓப்பனாக கூறிய தொகுப்பாளினி டிடி..
சின்னத்திரையில் கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றி தனக்கென ஒரு இடத்தினை பிடித்தவர் தொகுப்பாளினி டிடி. ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று அதன்பின் அதே நிகழ்ச்சிக்கு தொகுப்பாளினியாக பணியாற்றியவர்.
இதையடுத்து, காஃபி வித் டிடி என்ற நிகழ்ச்சி மூலம் பிரபலங்களை தன் பாணியில் பேட்டியெடுத்து புகழ் பெற்றார். பின் பல நிகழ்ச்சி மற்றும் விருது விழாக்களை தொகுத்து வழங்கி வந்தார். 2014ல் ஸ்ரீகாந்த் என்பவரை காதலித்து திருமணம் செய்து 3 ஆண்டுகளிலேயே விவாகரத்து கேட்டு பிரிந்தார். இதற்கு பல காரணங்கள் கூறி வந்தனர்.
இந்நிலையில் இணையத்தில் ரசிகர்களுடன் நேரலை பேசிய டிடி, ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார். முதல் திருமண வாழ்க்கை தற்போதைய வாழ்க்கையை பாதிக்கிறதா என்றும் 2ஆம் காதல் மீது நம்பிக்கை இருக்கிறதா என்று கேட்டுள்ளனர். அதற்கு டிடி, முதல் காதல் இரண்டாம் காதல் என்று என்ன இருக்கிறது. காதல் என்பது வாழ்க்கையின் ஒரு பகுதியாகும்.
அது எத்தனை முறை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் வரும். ஒரே நேரத்தில் 5 காதலர்களை காதலிப்பது தான் தவறு என்றும் பதில் கொடுத்துள்ளார் டிடி.