விவாகரத்துக்கு பின் மாஜி மனைவிக்கு தூது? தனுஷை கண்டபடி அவமானப்படுத்திய ஐஸ்வர்யா!!

Dhanush Aishwarya Rajinikanth
By Edward Jun 07, 2022 04:12 AM GMT
Report

கடந்த 2004 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்தை காதலித்து திருமணம் செய்தார். 18 வருட திருமண வாழ்க்கையில் இரு மகன்கள் இருக்கும் நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிய முடிவெடுத்தனர்.

தற்போது இருவரும் தனிமையில் இருந்து தங்கள் பணிகளை செய்து வருகிறார்கள். ரஜினி உட்பட பலர் இருவரையும் இணைக்க பல முறை அறிவுரை கூறியும் முடியாது என்று முடிவோடு இருந்து வந்தனர். ஒரு கட்டத்தில் ஐஸ்வர்யா மகன்களுக்காக பொறுமையுடன் வாழலாம் என்று முடிவுக்கு வந்ததாகவும் கூறப்பட்டது.

ஆனால் தனுஷ் தன்னுடைய முடிவில் ஸ்ட்ராங்காக இருந்துள்ளார். ஆனால் தற்போது தனுஷின் கேரியலில் சற்று தோல்வியாகவும் வருவதால் இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் தனுஷை பார்த்து ஒளிந்து கொள்கிறார்களாம். இதற்கெல்லாம் விவாகரத்து தான் காரணம் என்று யோசித்து வந்த தனுஷ் ஒரு முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் நாம் மீண்டும் சேர்ந்து வாழலாம் என குடும்பத்தார் மூலம் தூதுவிட்டாராம் தனுஷ். அந்த குப்பையுடன் இனி சேர்ந்து வாழும் பேச்சுக்கே இடமில்லை என்று ஐஸ்வர்யா கோபமாக கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படி ஒரு முடிவெடுத்தால் எப்படி என்று பலர் ஐஸ்வர்யாவை சமாதானப்படுத்த முயற்சிகள் எடுத்து வருகிறார்களாம். இயக்கத்தில் ஆர்வம் கொண்டுள்ள ஐஸ்வர்யா, விவாகரத்துக்கு பின் தான் சுதந்திரமாக இருக்கிறார். சமுகவலைத்தளங்களில் ஆக்டிவாகவும் இருந்து வீடியோ புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.