சொத்துக்காக இப்படியா? தனுஷ் பட பாணியில் மாப்பிள்ளையை கடத்தி துப்பாக்கி முனையில் தாலி கட்டவைத்த கும்பல்!
நடிகர் தனுஷ் சமீபத்தில் அக்ஷய் குமார், சாரா அலிகான் நடிப்பில் இணைந்து நடித்த பாலிவுட் படம் கலாட்டா கல்யாணம். இப்படத்தில் தனுஷை வற்புறுத்தி கடத்தி கதாநாயகிக்கு தாலி கட்ட வைப்பார்கள். அதேபாணியில் தற்போது பீகார் மாநிலத்தில் நடைபெற்றுள்ளது.
பீகார், பெகுசராய் பகுதியில் கால்நடை மருத்துவர் ஒருவர் நோயால் பாதிக்கப்பட்ட விலங்கை பரிசோதிக்குமாறு அழைக்கப்பட்டு துப்பாக்கி முனையில் பெண் வீட்டார் அவர்களின் மகளுக்கு தாலி கட்டி திருமணத்தை நடத்தியுள்ளனர்.

இதுகுறித்து கால்நடை மருத்துவரின் தந்தை போலிசில் புகாரளித்துள்ளார். அதிக ஊதியம் சொத்து வைத்திருந்ததை அறிந்தே தான் அவரை கடத்தி கட்டாய திருமணம் செய்து வைத்திருந்ததாக அவர் புகாரில் தெரிவித்திருக்கிறார். சொத்துக்காக இப்படியெல்லாமா செய்வாங்க என்று இணையத்தில்கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
बिहार के बेगूसराय में मंगलवार को बीमार पशु की जांच के लिए बुलाए गए पशु चिकित्सक को तीन लोगों ने अगवा कर जबरन शादी कर ली. #bihar #viralvideo #kidnapped #marriage #atrangire #lalluramnews #lalluram pic.twitter.com/6lLbMmER7g
— Lallu Ram (@lalluram_news) June 15, 2022