அட சும்மா இருங்கப்பா? பேசவிடாமல் பன்னீர் மாலை போட்ட தொண்டர்களால் கடுப்பாகிய ஈபிஎஸ்..
அதிமுக கட்சியில் சமீபத்தில் தொண்டர்கள் செய்யும் அட்ராசிட்டி செயல்கள் தான் தற்போது தமிழகத்தின் ஹாட் டாப்பிக். ஒற்றை தலைமை வேண்டும் என்று ஈபிஎஸ் தரப்பினரும் பொதுக்குழு வேண்டாம் என்று கூறி ஓபிஎஸ் தரப்பினருடம் சண்டைப்போட்டுக்கொள்ளும் செயல் தமிழகத்தில் விறுவிறுப்பான செய்திகளாக இருந்து வருகிறது.
ஓபிஎஸ் - ஈபிஎஸ்
இதுகுறித்து இன்று அதிமுக சார்பாக செயற்குழு - பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் நடைபெற்றது. ஓபிஎஸ் -ஈபிஎஸ் இருவரும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஓபிஎஸ் அமர்ந்திருக்கும் போதே ஈபிஎஸ் ஆதரவாளர்கள் எதிர்கட்சி தலைவர் எடப்பாடியார் வாழ்க என்று கோஷம் போட்டு ஓபிஎஸ்-ஐ வெறுப்பேற்றி வந்தனர்.
பின் ஓபிஎஸ் பொறுமை காக்கமுடியாமல் கூட்டத்தை விட்டு விலகி வெளியேறினார். அதன்பின் அவர்மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டது. இந்நிகழ்வுக்கு முன் ஓபிஎஸ் மேடையில் உட்கார்ந்திருந்த போது, எடப்பாடி பழனிசாமி மேடை பேச்சினை ஆரம்பித்தார்.
அட சும்மா இருங்கப்பா
பேச ஆரம்பித்த எடப்பாடியிடம் தொண்டர்கள் பன்னீர் மாலை அணிவிக்க இருங்கப்பா என்று புலம்பி தவித்துள்ளார். ஒரு மனுஷனை பேசவிடாமல் இப்படியா செய்வது என்று பல கேலி செய்து கலாய்த்து வருகிறார்கள்.
இருங்கப்பா சும்மா... கடுப்பாகி மாலையை தட்டிவிட்ட இபிஎஸ் #AIADMK | #OPanneerselvam | #EdappadiPalaniswami | #ADMK | @OfficeOfOPS| @EPSTamilNadu| @AIADMKOfficial pic.twitter.com/30PO0IUOfE
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) June 23, 2022