ஒரு நாளைக்கு 5, 10 பேர் அதுக்காக பணத்தை போடுவார்கள்!! துபாய் பார்ட்டியில் நடப்பது இதான்..
டிக்டாக் செயலி மூலம் வீடியோக்களை பகிர்ந்து பிரபலமானவர்களில் ஒருவர் இலக்கியா. தற்போது கிளாமர் குயினாக இணையத்தில் எல்லைமீறி ஆட்டம் போட்டு வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களை ஈர்த்து வருகிறார். சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியொன்றில், துபாயில் இரவு நேர விருந்துகளில் ஆட்டம் போட அழைத்து சென்று 2 லட்சம் அட்வான்ஸ் கொடுப்பார்கள்.
அதை வாங்கி சென்று அது நமக்கு பிடிக்கவில்லை என்றால் வந்துவிடலாம். ஆனால் 2 லட்சம் பணத்தை திருப்பி கொடுத்துவிட வேண்டும். இல்லை என்றால் அங்கே இருந்து அந்த காசை செட்டில் செய்துவிட்டு திரும்பி வந்துவிடலாம்.
ஆனால், துபாய் நைட் பார்ட்டியில் எந்த கொடுமையான செயலும் நடக்காது என்றும் நாம் பாட்டுக்கு நடனமாடி இருக்க அவர்களும் அவர்கள் பாட்டுக்கு இருப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார். அந்த வேலைக்கு செல்ல முதலில் உடல் நடத்துடன் இருக்கிறோமா, நோய் இருக்கிறதா என்று பரிசோதனை செய்வார்கள்.
அந்த மருத்துவ அறிக்கை கொடுத்தால் தான் நம்மை கலந்து கொள்ளவிடுவார்கள். பல முறை நான் நைட் பார்ட்டிக்கு ஆடி இருக்கிறேன். 2 லட்சம் அட்வான்ஸ் வாங்கி 5 லட்சம் 10 லட்சம் சம்பாதித்து இருக்கிறேன். நடனமாடுவதற்கு என்று தனி சம்பளம் இருக்கும்.
அதைதாண்டி அந்த பார்ட்டிக்கு வரும் விருந்தினர்கள் நமக்கு
போடக்கூடிய பணம், அனைத்தும் நம் சம்பளம் தான். குறிப்பிட்ட
நிறுவனத்திற்கு கமிஷன் போக நிறைய பேர் பணம் போடுவார்கள். ஒரு
நாளைக்கு 5 முதல் 10 பேர் அப்படி போடுவார்கள் என்று இலக்கிய
ஓப்பனாக பேசியிருக்கிறார்.