பிரபல இயக்குநர் மணிரத்னம் படத்தை உதறிய பிரபல நடிகையின் கணவர்! இதுதான் உண்மையான காரணம்!
தமிழ் சினிமாவில் கடந்த 2018ல் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் ஏ ஆர் ரகுமான் இசையில் வெளியான படம் தான் செக்க சிவந்த வானம். அரவிந்த் சாமி, பிரகாஷ்ராஜ், அருண் விஜய், விஜய்சேதுபதி, சிம்பு, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதிராவ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்து வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ஓரளவிற்கு வெற்றியை கண்டது.
இப்படத்தில் நடிகர் அருண் விஜய்யின் தியாகு கதாபாத்திரத்தில் முதல் அவர் கமிட்டாகவில்லையாம். பிரபல மலையாள நடிகர் பஹத் பாசில் தான் ஒப்பந்தமானாராம். நடிகை நஸ்ரியாவை திருமணம் செய்து தற்போது இருவரும் சேர்ந்து படத்தில் நடித்து வருகிறார்கள். இந்நிலையில், இப்படத்தில் நடிக்காமல் விலகியதற்கு கால்ஷீட் தான் காரணம் என்று கூறப்பட்டது. ஆனால் அது கிடையாது என்று சமீபத்தில் கூறியுள்ளார் பஹத் பாசில்.
கடந்த 2017ல் என்னிடம் ஸ்க்ரிப்ட்டை இயக்குநர் மணிரத்னம், சொன்னபோது அதை என்னால் மனதில் விஷுவலாக காட்சிப்படுத்தி பார்க்க முடியவில்லை. இதுபற்றி சில நாட்கள் குழப்பத்திலேயே இருந்து வந்தேன் என்று அவரிடம் துணிந்து தன் முடிவை கூறினேன் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து மணிரத்னம் அவருக்கு பதில் நடிகர் அருண் விஜய்யை ஒப்பந்தம் செய்து நடிக்க வைத்துள்ளாராம்.
அப்படத்தில் நடிகர் பஹத் நடித்திருந்தால், வேலைக்காரன் படத்தை விட நல்ல மதிப்புமிக்க நடிகராக தமிழ் சினிமாவில் ஜொலித்திருப்பார் என்று கூறப்பட்டு வருகிறது.