உருகிஉருகி காதலித்து இரண்டாம் தாரமான நடிகை!! காசுக்காக கழட்டிவிட்ட விஜய் பட நடிகர்..
தமிழ் சினிமாவில் லிஜெண்ட் இயக்குனர் என்ற பெயரை பெற்ற இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் மகேந்திரன். 12 படங்கள் மட்டுமே இயக்கி தவிர்க்க முடியாத இயக்குனர் என்ற போர்வையை போர்த்தியவர் மகேந்திரன். கடந்த கதை 26, வசனம் 27, திரைக்கதை 14 என்றும் நடிகராகவும் திகழ்ந்தார்.
அவர் மறைவுக்கு முன் விஜய்யின் தெறி படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இந்நிலையில் இயக்குனர் மகேந்திரன் பற்றிய உண்மை ரகசியம் ஒன்று வெளியாகியுள்ளது. ஜானி படத்தில் நடிகர் ரஜினிகாந்த், ஸ்ரீதேவி நடித்திருப்பார்கள்.
அப்படத்தில் ஸ்ரீதேவியுடன் பயணிக்கும் ஒரு பெண் கேரக்டரில் நடித்தவர் தான் நடிகை பிரேமி. 60 ஆண்டு சினிமா வாழ்க்கையில் பல நூறு படங்களில் நடித்து சீரியல்களில் நடித்தும் வந்தார். ஜானி படத்தின் போது பிரேமிக்கும் மகேந்திரனுக்கும் காதல் மலர்ந்திருக்கிறது.
ஏற்கனவே அவர் திருமணம் செய்தவர் என்று தெரிந்தும் பிரேமி அவருடன் நெருக்கமாக பழகி வாழ்ந்து ஒரு குழந்தையையும் பெற்றிருக்கிறார். ஆனால் மகேந்திரனுக்கு வாய்ப்பில்லாமல் பொருளாதார சிக்கலில் இருந்ததால் இரு குடும்பத்தையும் சமாளிக்க முடியாமல் பிரேமியை விட்டு பிரிந்திருக்கிறார். சமீபத்தில் பிரேமியே இந்த விசயத்தை பேட்டியொன்றில் பகிர்ந்திருக்கிறார்.