மாளவிகாவால் குடும்பத்தில் எழுந்த பிரச்சனை!! ரகசியத்தை உடைத்த சுந்தர் சி..
சுந்தர் சி
தமிழ் சினிமாவில் பிரபல கமர்ஷியல் இயக்குனர் என்றால் அது சுந்தர் சி தான். தற்போது அவர் இயக்கி நடித்துள்ள அரண்மனை 4 திரைப்படம் வெளியாகியுள்ளது.
பேட்டி
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட சுந்தர் சி, நடிகை மாளவிகா குறித்து பேசியுள்ளார்.அதில் அவர் கூறுகையில், என்னுடைய மகளுக்கு 'மாளவிகா' என்று பெயர் வைக்கலாம் என இருந்தோம். அது தொடர்பாக பேசிவிட்டு, நான் படத்தின் கம்போசிங்காக தேவா சார் வீட்டிற்கு சென்றேன்.
அப்போது அவர், சார் எதாவது நல்ல பெயர் சொல்லுங்க அதை வைச்சி பாட்டு போடலாம் என்று சொன்னார். நானும் உடனே ’மாளவிகா’ என்று சொல்லிவிட்டேன். அவரும் "மாளவிகா.. மாளவிகா" என்ற பாட்டை போட்டார்.
அந்த படத்தில் ஹீரோயின் பெயரையும் மாளவிகா வைத்துவிட்டோம். மகளுக்கு வைக்க இருந்த பெயரை ஹீரோயினுக்கு வைத்ததால் குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டது . அந்த படத்திற்கு பின் ஸ்வேதா என்ற பெயரை மாளவிகா என்றே மாற்றிக்கொண்டார் என சுந்தர் சி தெரிவித்துள்ளார்.