மணிரத்னம்-ஐ நிற்க வைத்து அவமானப்படுத்திய இளையராஜா!! ரகசியம் உடைத்த பிரபலம்..
இசைஞானி இளையராஜா சமீபகாலமாக தன்னுடைய பாடலை பயன்படுத்த ராயல்டி பெற்று இசையை பயன்படுத்த வேண்டும் என்று கேட்டு வருகிறார். அந்தவகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள கூலி படத்தின் டைட்டில் பிரமோ வீடியோவில் இளையராஜா இசையமைத்த இசையை பயன்படுத்தி இருக்கிறார்கள்.
இதற்கு இளையராஜா வழக்கும் தொடுத்துள்ளது பரபரப்பாக தற்போது பேசப்பட்டு வருகிறது. இதுகுறித்து பல பத்திரிக்கையாளர்கள் இளையராஜாவை விமர்சித்து பேசி வருகிறார்கள்.
சமீபத்தில் மூத்த பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு இளையராஜா செய்த செயலை பற்றி ஓப்பனாக பேசியிருக்கிறார். ரோஜா படத்திற்கு இசையமைக்க பாலச்சந்தர் மணிரத்னமை இளையராஜா அலுவலகத்திற்கு சென்று பார்க்க சொல்லி இருக்கிறார்.
அப்போது பிரசாத் ஸ்டுடியோவில் அப்படியே நேராக உள்ளே சென்ற மணிரத்னமிடம் உன்னை யார் உள்ளே வரச்சொன்னது, அங்க போய் மரத்தடியில் நில்லுன்னு சொல்லி இருக்கிறார்கள். இதை யாரோ பார்த்து பாலச்சந்தரிடம் கூற, அவர் கார் எடுத்துக்கொண்டு வந்து, புது ஆளை கொண்டு வரலாம் என்று நினைத்து தான், ஏ ஆர் ரகுமானை அறிமுகப்படுத்தினார்கள்.