அன்று இளையராஜாவை அசிங்கப்படுத்திய ரஜினி.. இன்று பழிவாங்கிய இசைஞானி

Rajinikanth Ilayaraaja
By Kathick May 01, 2024 01:30 PM GMT
Report

இசைஞானி இளையராஜா தன்னுடைய அனுமதி இல்லாமல், தனது பாடல்களை யாரவது திரையுலகில் பயன்படுத்தினால், உடனடியாக அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பிடுவுவதை வழக்கமாக வைத்துள்ளார். இது பெரும் சர்ச்சையாகவே மாறியது.

இந்த நிலையில் ரஜினிகாந்தின் நடிப்பில் உருவாகவுள்ள கூலி திரைப்படத்தின் டைட்டில் டீசரில் தன்னுடைய இசையை அனுமதியின்றி பயன்படுத்தியதாக, சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளாராம். கூலி படத்தின் டைட்டில் டீசரில் இடம்பெற்ற 'வா வா பாக்கம் வா' பாடலின் இசைக்கு உரிய அனுமதி பெற வேண்டும், அல்லது டீசரில் இருந்து அந்த இசையை நீக்க வேண்டும் என சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாம்.

அன்று இளையராஜாவை அசிங்கப்படுத்திய ரஜினி.. இன்று பழிவாங்கிய இசைஞானி | Ilayaraja Copyright Notice To Rajinikanth Movie

அவ்வாறு செய்யாத பட்சத்தில், சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள தங்களுக்கு அனைத்து உரிமைகளும் இருப்பதாக இளையராஜா தரப்பு சுட்டிக்காட்டியுள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன், மேடையில் இளையராஜாவிடம் இதுபற்றி பேசும்போது, 'இப்போ நல்ல காசு வருத்துல சாமி, அதுக்காக எதோ பண்ணிருக்கீங்களாமே' என நகைச்சுவையாக கூறியிருப்பார் ரஜினி.

உடனடியாக அங்கிருந்த அனைவரும் சிரிக்க துவங்கிவிடுவார்கள். அன்று ரஜினிகாந்த் கலாய்த்து பேசிய விஷயத்திற்காக தான் இன்று இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார் என நெட்டிசன்கள் கிண்டலாக கூறி வருகிறார்கள்.