அங்க போய் என்னா கும்மாளம் போட்டீங்க! நடிகைகள் மீது மாலத்தீவு எடுத்த அதிரடி முடிவு!
கடந்த சில காலங்களாக பெரிதாக பேசப்பட்டு வருவது மாலத்தீவு ரெசார்ட்களில் நடிகைகள் போடும் கும்மாளம் தான். ஓசியில் கிடைத்தால் போது அதை அனுபவிக்க எங்கு சென்றாலும் அறைகுறையில் இணையத்தில் ரசிகர்களை ஈர்ப்பதை குறிக்கோளாக கொண்டு வருகிறார்கள் பெண் பிரபலங்கள்.
அந்தவகையில் மில்லியன் கணக்கில் ஃபாலோயர்களை வைத்திருக்கும் பிரபலங்கல் அதுவும் நடிகைகள் தொகுப்பாளினிகளுக்கு இலவச டிக்கெட், ஓட்டல் அறை, உணவு என வழங்கி வந்தது மாலத்தீவு. இதை பயன்படுத்தி இந்திய மற்றும் தென்னிந்திய நடிகைகள் சுற்றுலாவாக நாட்களை அங்கு கழித்து வந்தனர். தற்போது அதற்கு தடை போட்டுள்ளது மாலத்தீவு.
இந்தியாவில் கொரானா வைரஸின் இரண்டாம் அலை உச்சத்தை அடைந்துள்ளதால் இந்தியாவை சேர்ந்த யாரும் மாலத்தீவிற்கு வர தடை விதித்துள்ளது. இதுபற்றி ஏற்கனவே நடிகை ஸ்ருதி ஹாசன் விமர்சித்ததை அடுத்து இப்படி நடந்துள்ளது நடிகைகளிடையே அதிர்ச்சியையளித்துள்ளது.