ஐபிஎல் 2025 டைட்டில் வின்னர் ஆர்சிபி!! 20 கோடி பரிசு!! யார் யாருக்கு என்ன பரிசு தெரியுமா?
ஐபிஎல் 2025ன் இறுதிப் போட்டியில் நேற்று ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் பெங்களூரு - பஞ்சாப் அணிகளுக்கு எதிராக நடைபெற்றது. முதலில் ஆடிய ஆர்சிபி அணியினர் 9 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் அடுத்து பஞ்சாப் அணிக்கு 191 ரன் இலக்கை கொடுத்தது. ஆரம்பத்தில் பஞ்சாப் அணியினர் சிறப்பாக விளையாடமுடியாமல் திணறியப்பின் ஷஷாங் சிங் அதிரடி ஆட்டம் ஆடியும் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
சுமார் 18 ஆண்டுகளாக ஐபிஎல் போட்டித்தொடரில் முதன்முறையாக ஆர்சிபி அணியினர் கோப்பையை கைப்பற்றினர். கோப்பையை தட்டிச்சென்ற இந்த வாரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியுடன் ஆர்சிபி அணிக்கு மாபெரும் பரிசுத்தொகையும், தொடரில் வீரர்களுக்கு மதிப்புமிக்க தனிநபர் விருதுகளும் வழங்கப்பட்டன.
பரிசுத்தொகையும் தனிநபர் விருதுகளும்
அந்தவகையில், லீக் சுற்று முடிவில் தகுதிப்பெற்ற 4 அணிகளில் ஆர்சிபி, பஞ்சாப் கிங்க்ஸ் முதல் இரு இடத்தை பிடித்தது. குவாலிஃபயர் 2 சுற்றில் மும்பை, குஜராத் அணிகள் பிடித்தன.
இந்நிலையில் ஐபிஎல் 2025 சாம்பியன் பட்டத்தை பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு சுமார் ரூ. 20 கோடி பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. இறுதிப்போட்டியில் தோற்று 2வது இடத்தை பிடித்த பஞ்சாப் கிங்க்ஸ் அணிக்கு சுமார் ரூ. 12.5 கோடி கொடுக்கப்பட்டது.
குவாலிஃபையர் 3வில் வெற்றிப்பெற்று 3வது இடத்தை பிடித்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரூ. 7 கோடி பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது. எலினிமேட்டரை எட்டி 4வது இடத்தை பிடித்த குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ரூ. 6.5 கோடி வழங்கப்பட்டது.
ஐபிஎல் 2025 தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கு தனிநபர் விருதுகளும் தலா 10 லட்சம் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டனர்.
அதில், ஐபிஎல் 2025 ஆரஞ்சு கேப் மற்றும் வளர்ந்து வரும் வீரர், ஃபேண்டஸி கிங் ஆஃப் தி சீசன், சீசனின் அதிக பவுண்டரிகள் அடித்த வீரர் உள்ளிட விருதிகளை பெற்றார் குஜராத் டைட்டன்ஸ் வீரர் சாய் சுதர்சன்.
ஐபிஎல் 2025ன் பர்பிள் கேப்பை பிரசித் கிருஷ்ணா பெற்றுள்ளார். சீசனின் சூப்பர் ஸ்ட்ரைக்கர்:
வைபவ் சூர்யவன்ஷி ரூ.10 லட்சம் + டாடா கர்வ் கார் பரிசை பெற்றார்.
சிறந்த கேட்ச் பிடித்த கமிந்து மெண்டிஸ்-க்கு வழங்கப்பட்டது.
சூப்பர் சிக்ஸ் விருதை நிக்கோலஸ் பூரன் பெற்றார்.
ஐபிஎல் 2025 மிகவும் மதிப்புமிக்க வீரர் (Most Valuable Player) விருதினை சூர்யகுமார் யாதவ் பெற்றதோடு ரூ.15 லட்சம் பரிசுத்தொகையையும் பெற்றார்.
ஃபேர்பிளே விருது (Fairplay Award) விருதினை சென்னை சூப்பர் கிங்ஸ் பெற்றதோடு ரூ.10 லட்சம் பரிசுத்தொகையையும் பெற்றது.
இறுதி போட்டி விருதுகள்
பிட்ச் அண்ட் கிரவுண்ட் விருது (சிறந்த மைதானம்): டெல்லி கேபிடல்ஸ்-ன் ஹோம் கிரவுண்ட் (புது டெல்லி) (ரூ.50 லட்சம்) பிடித்துள்ளது.
இறுதிப்போட்டியில் சிறப்பாக செயல்பட்ட வீஅர்களுக்கு விருதுகளும் பரிசுத்தொகையும் வழன்ங்கப்பட்டது.
அதில் ஆட்ட நாயகன் விருதினை க்ருணால் பாண்டியா வென்று ரூ. 5 லட்சம் பரிசுத்தொகையை பெற்றார்.
சூப்பர் ஸ்டிரைக்கர் விருதினை ரூ. லட்சம் பரிசுத்தொகையை ஜிதேஷ் சர்மா பெற்றார்.
அதிக டாட் பால்கள் விருதினை க்ருணால் பாண்டியா பெற்றார். பரிசுத்தொகை 1 லட்சம் ரூபாய்.
அதிக பவுண்டரிகள் அடித்த பிரியன்ஷ் ஆர்யாவுக்கு ரூ. 1 லட்சம் பரிசு.
ஃபேண்டஸி கிங் விருதோடு 1 லட்சம் ரூபாய் மற்றும் அதிக சிக்ஸர்கள் அடித்து 1 லட்சம் பரிசை ஷஷாங்க் சிங் பெற்றார்


